Monday, October 29, 2012

எதுவுமே தெரியாது




இன்சூரன்சு ஆபீசரும்
ஆளுங்கட்சி மந்திரியும்
அடிக்கடி வந்ததுவும்

ஆளுயர மேடையில
கட்டுப்பணம் கைமாறினதுவும்
பாழான வீட்டுச் சுவரு
புதுசாக மாறினதுவும்

நாலுநாளு அழுத மஞ்சுளா
நாற்பதாவது நாளு
நான் ஈ பார்த்ததுவும்

நானூறு நாள்
வெற்றி விழா கொண்டாட்டமாய்
வெள்ளைச் சேலை
நீலச் சேலையாய் மாறியதுவும்

படிப்படியாய்
அவன்
கறுப்பு வெள்ளை ஓவியம்
கலர் கலராய் மாறியதுவும்

எதுவுமே தெரியாது
இடிவிழுந்து
செத்துப்போன
வெள்ளையனுக்கு.






.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. இதுதான் உலகம் என்பதை கவிதை வரிகள் அழகாக சொல்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ. சுவனப்பிரியன்!

      Delete
  2. இறுதி வரிகள் சட்டென
    அதிர வைத்துப் போனது
    மனம் தொட்டப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி சார்.

      Delete
  3. நடக்கும் உண்மைகள்...

    பாவம்... ...ம்ஹீம்... கொடுத்த வைத்த வெள்ளையன்...

    tm4

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான். கொடுத்து வைத்தவன்தான் வெள்ளையன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  4. இன்றைய யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கவிதை. அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கசாலி சார்.

      Delete
  5. முடிவு வருந்தச்செய்தது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

      Delete
  6. இதுதான் உலகம்ன்னு புரிய வெச்சது..,

    ReplyDelete
  7. உண்மைகள் சார் உண்மைகள்

    ReplyDelete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
    2. காலம்! எல்லா துன்பங்களுக்கும் சிறந்த மருந்து என்பது மிக உண்மை!

      Delete
  9. எதற்தத்தை அழகாக வடித்து எடுத்திருக்கிறீர்கள்... அருமை..

    ReplyDelete
  10. கடைசி வரி திடுக்கிட வைத்தது. உணர்வு பூர்வமான கவிதை!

    ReplyDelete
  11. எதுவுமே தெரியாது
    இடிவிழுந்து
    செத்துப்போன
    வெள்ளையனுக்கு.

    நிதர்சனம்

    ReplyDelete

  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  13. இணையக் குயிலின் குரல்
    சில மாதங்களாய் கேட்காதது
    எதையோ இழந்ததைதைப் போலத்தான் இருக்கிறது
    இனியெனும் கூவிட வேணுமாய் அன்புடன்
    வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
    தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

    பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.