Friday, October 28, 2011

வியப்பூட்டும் உண்மைகள்! - நம்ம ஸ்டைல்...ல.

சில விஷயங்களை அறிந்துகொள்ளும்போது அட அப்படியா? என்று ஓர் ஆச்சர்ய உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட சில விஷயங்களை துணுக்குகளாக தருகிறேன்.

1. துருக்கியின் தலைநகரான் இஸ்தான்புல் நகரம் இரண்டு கண்டங்களில்
அமைந்துள்ளது. ( நமக்கு தெலுங்கானவையே சமாளிக்க முடியலயே.
எப்படித்தான் எல்லைப் பிரச்சினையை சமாளிக்குறாங்களோ? தெரியல.)

2. 80 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் மீண்டும் திருமணம்
செய்ய நேரிட்டால் தற்போது வாழ்ந்து வரும்
மனைவியையே திருமணம் செய்வதாக
தெரிவித்துள்ளார்கள். (புது பிசாசுக்கு பழைய பேயே
பரவாயில்லை அப்படின்னு நினைச்சாங்களோ
என்னவோ?)

3. கம்போடியா நாட்டில் ஓடும் டொன்லெ சாப் என்கிற
நதியானது வருடத்தில் 6 மாதம் வடக்கு நோக்கியும் மீதி 6 மாதம்
தெற்கு நோக்கியும் ஓடுகிறது.
( நம்ம காவிரிகூட மீதிநாளும் நம்ம பக்கம் திரும்பிட்டா
காவிரி பிரச்சினை வராதுல்ல)

4. சாதாரணமாய் நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை
வைத்து கோடு போட்டால் 35 மைல் நீளத்துக்கு வருமாம்.
(இனிமே தேர்தலுக்கெல்லாம் பென்சிலை
வைத்தே விளம்பரம் பண்ணிரலாம் போலிருக்கே)

6. மனிதன் பிறக்கும்போது 300 எலும்புகளுடன் பிறக்கிறான்.
ஆனால் நன்கு வளர்ந்த பின்பு 206 எலும்புகள் மட்டுமே
உள்ளவனாய் மாறுகிறான். காரணம் பலவீனமான
எலும்புகள் பலமுள்ள எலும்புகளோடு ஒன்றோடு ஒன்று இணைந்து
விடுவதுதான். (இனிமே உன் எலும்பை எண்ணிருவேன்னு யாரயும்
சொல்லாதீங்க. எண்ணிக்கை தப்பாயிடும்)

7. அமெரிக்காவின் நாசா விண்ணில் நிறுவியுள்ள ஹப்பிள் டெலஸ்கோப்பானது
பூமியை ஒருமுறை சுற்றுவதற்கு 97 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.
இதற்கு அது எடுத்துக்கொள்ளும் சக்தி எவ்வளவு தெரியுமா?
வெறும் 30 பல்புகள் எரியத் தேவையான சக்திதான்.
(நம்ம அரசு அலுவலங்களில் பணிபுரிபவர்களுக்கு
ஹப்பிளை வைத்து டியூசன் எடுக்கலாமோ?)

8. உலகமெங்கும் நடக்கும் திருமண பந்தங்களில் 70
சதவிகித ஆண்களும், 60 சதிவிகித பெண்களும் தங்கள்
வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்வதாய் ஒரு ஆராய்ச்சி
அறிக்கை தெரிவிக்கிறது.
(அட. சே! என்னப்பா இதெல்லாம் போய் வெளிய சொல்லிக்கிட்டு!)

9. ஒரு ஆண்டில் விமான விபத்துக்களால் நடக்கும் மரணங்களை விட
கழுதைகள் கடித்து ஆண்டுதோறும் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை
அதிகமாம்.(அடேங்கப்பா! கழுதைங்ககிட்டயும் ஜாக்கிரதையாதான்
இருக்கணும் போல)

10. ஏர்க்கண்டிஷன் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அந்த காலத்தில் அறையை
கூலாக வைத்திருக்க வெள்ளைத் திரைகளை மக்கள்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.
(நம்ம ஊருக்கு இதுல்லாம் சரிப்பட்டு வருமுங்களா?)

Tuesday, October 25, 2011

செல்லம்மாவுக்கு ஒரு கவிதை!

என் செல்லக்கிளியே செல்லம்மா!

இன்று தீபாவளியாம்
நாடே குதூகலமாய் இருக்கிறது

நாமும் இருக்க வேண்டுமாம்
நாமெங்கே இருக்க

நல்ல துணி உடுத்தி எத்தன நாளாச்சி
நல்ல சோறு துன்னு எத்தன நாளாச்சி

எங்க ராசய்யா முதலாளி
போனசுன்னு கொடுத்த 500 ரூபா

நம்ம சின்னக்குட்டி மைனாவுக்கு
கவுன் எடுக்க சரியாப் போச்சி

நம்ம ராமுப் பயலுக்கு
பிளாட்பாரத்துல
எதையெடுத்தாலும் அம்பது ரூபான்னு சொன்னவன்கிட்ட
துணி எடுத்தாச்சு

ஆனாலும் ராமு பார்வையில
திராவகம் கொட்டுச்சு

நம்ம நெஞ்சுலயும் இரத்தம்தான் கொட்டுச்சு

துணியில்ல
வெடியில்ல

தீபாவளியாம்
கொண்டாட்டமாம்

தீபாவளி வருஷாவருஷம்தான் வருது
நமக்கு விடிவெப்போ?
நம்ம கஷ்டத்துக்கு முடிவெப்போ?

கண்ணீருடன் சின்னய்யா!

Monday, October 24, 2011

என்னைக் கவர்ந்த பொன்மொழிகள் வரிசை - 2:

1. மனிதனுக்கு ஆசையால் விருப்பமும்,
விருப்பத்தால் கோபமும், கோபத்தால் மயக்கமும், மயக்கத்தால்
புத்திநாசமும், புத்திநாசத்தால் அழிவும் ஏற்படுகிறது.

2. நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருடைய ஆசையும்.
ஆனால் நன்றாக வாழ நினைப்பவர்கள் குறைவு.

3. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும், மாறக்கூடாது.
ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.

4. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. இதயத்தின் ஈரமும் வேண்டும்.

5. பணமும் மகிழ்ச்சியும் நிரந்தர விரோதிகள். ஒன்று தங்குமிடத்தில்
மற்றொன்று தங்குவதில்லை.

6. முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருக்காதீர்கள். இந்த உலகம்
உங்களை உமிந்து விடும்.

7. துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.

8. உழைப்பும் நம்பிக்கையும் சேருமிடத்தில் ஏழ்மை இருக்காது.

9. தீய குணங்களை சுலபமாக விடமுடிவதில்லை. ஆனால்
நல்ல குணங்களை சுலபமாக விட்டு விட முடிகிறது.

10. ஒழுக்கம் என்பது மரம். புகழ் என்பது அதன் நிழல்.
நிழலைப் பற்றியே அதிகமாக அதிகமாக நினைக்கிறோம்.
ஏனோ மரத்தை மறந்துவிடுகிறோம்.

Saturday, October 22, 2011

உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் (Defragment) செய்துவிட்டீர்களா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:


கணினியில் டீ-பிராக்மெண்ட் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட கணினி வைத்திருப்பவர்கள் அல்லது கணினியில் வேலை செய்பவர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.



கணினியில் நாம் பதியும் தகவல்கள் எல்லாமே கணினியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பதியப்படும். துண்டு துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பதியப்படும் தகவல்கள் குப்பைகள் போல் நிறைந்து, நாளாக நாளாக என்ன ஆகும் என்றால் ஏதாவது ஒரு தகவலை நாம் தேடும்போது கணினி திணறத் தொடங்கும். கணினியில் உள்ள தகவலை தேடும் ஹெட் பகுதி மிகவும் கஷ்டப்பட்டு தகவலை தேடி எடுத்து நமக்குத் தருவதால் மிகுந்த காலதாமதமாகும். கணினியின் வேலை செய்யும் திறன் குறையத்தொடங்கும். அடம்பிடிக்கும். அப்போது தான் டீ-பிராக்மெண்ட் செய்வது அவசியமாகிறது. கணினியில் உள்ள ஒரு புரோக்ராமை (விண்டோசில் அது Default ஆகவே இருக்கும்) நாம் செயல்பட கட்டளையிடும் போது அது டீ-பிராக்மெண்ட் செய்யத்தொடங்கும். ஆங்காங்கே உள்ள பைல்களை எல்லாம் ஒவ்வொரு குழுவாக சேர்த்து வைக்கும். இது வெகு நேரமாக நடைபெறும். ஒரு மணி நேரம் கூட ஆகலாம். குழுரீதியாக சேர்த்து வைக்கும் வேலை முடிந்து விடுவதால் இனி நாம் புதிதாக உருவாக்கி பதியும் பைல்கள் அந்த குழுவில் வரிசையாக அடுக்கி வைக்கப்படும். ஆகவே ஏதாவது பைலை நாம் தேடும்போது எளிதாக தேடித் தரும். கணினியின் வேகம் கூடியிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

நம்முடைய இதயத்தை கணினியின் நினைவகத்துடன் (ஹார்ட் டிஸ்க்) ஒப்பிடலாம். கணினியின் நினைவகத்தில்தான் நாம் கணினியில் சேமிக்கும் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது. அதே போல்தான் நம்முடைய நினைவுகளும், நினைவெச்சங்களும் இதயத்தில்தான் சேர்த்து வைக்கப்படுகின்றன.


கணினியைப் போல நம்முடைய இதயத்திலும் குப்பைகள் போல தேவையில்லாத எண்ணங்களால் நிறைந்து ஒரு கட்டத்தில் சிந்தனைகளும் அசுத்தமான சிந்தனைகளாகி செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அதைத்தான் நாம் டென்ஷன், மன அழுத்தம் என பலபேரிட்டு அழைக்கிறோம். இந்நிலையில்தான் நம்முடைய இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்யவேண்டிய நிலை உருவாகிறது. நல்ல புத்தகங்களை வாசித்தல், சிறந்த மனிதர்களிடம் ஆலோசனை பெறுதல், தெய்வபக்தி முதலிய காரியங்களால் நாம் நம்முடைய மனதை (இதயத்தை) டீ-பிராக்மெணட் செய்ய அர்ப்பணிக்கும்போது நம்முடைய இதயமும் சுத்தமாகி தெளிந்த கண்ணாடி போல் ஆகிறது. வாழ்க்கையும் இனிக்கிறது.

என்ன உங்கள் இதயத்தை டீ-பிராக்மெண்ட் செய்ய கிளம்பி விட்டீர்களா?

Thursday, October 20, 2011

என்னைக் கவர்ந்த பொன்மொழிகள் 10:

பொன்மொழிகள் நமது முன்னோர்கள் நமக்கு தந்த பொக்கிஷங்கள். அவற்றை நாம் எப்போதும் பயன்படுத்துவதில்லை. நான் படித்த, ருசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது.

2. அதிகம் கற்றவனாயிரு. ஆனால் பிடிவாதக்காரனாயிருக்காதே.

3. அறியாமையைவிட இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.

4. தன் துன்பத்தை வெளிக்காட்டாமல் இருப்பவனை விட
தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பவனே அறிவாளி.

5. மனம் விட்டுப் பேசுவதை விட சிறந்த அறிவு வேறில்லை.

6. அழகுள்ள பெண் கண்களுக்கு விருந்து.
குணமுள்ள பெண் மனதுக்கு விருந்து.
முன்னது ஆபரணம். பின்னது பொக்கிஷம்.

7. பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ நினைத்தால் அது ஆசை.
தான் மட்டும் வாழ நினைத்தால் அது பற்று.
தானும் தன் இனமும் தன் நாடும் வாழ நினைத்தால் அது அன்பு.
சராசரமும் வாழ நினைத்தால் அது அருள் எனப்படும்.

8. இதயத்தோடு போராடுவதே உண்மையான போராட்டமாகும்.

9. பெண்கள் இதயத்தால் ஆளுகிறார்கள்.
ஆண்கள் மூளையால் அடிமையாகிறார்கள்.

10. ஆசிரியரும் பெற்றோரும் நமக்குப் பேசக் கற்றுத் தருகின்றனர்.
ஆனால் இந்த உலகமோ வாயை மூடிக்கொண்டிருக்க
கற்றுத் தருகிறது.



அடுத்த பொன்மொழிகள் 10 அடுத்த பதிவில்.

Wednesday, October 19, 2011

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி:

நான் சிறுவயதாயிருக்கும்போது என் தந்தை ஒரு சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு வரைபடத்தை அல்லது ஒரு ஓவியத்தை என்னிடம் தருவார். அது குழப்பி, கலைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஒன்று சேர்க்கவேண்டும் என்று அவர் எனக்குச் சொல்லுவார். நானும் வெகுநேரம் போராடி கடைசியில் ஒன்று சேர்த்து முழு ஓவியமாக அல்லது வரைபடமாக சேர்த்து ஒரு வெள்ளைத்தாளில் பசை கொண்டு ஒட்டி அவரிடம் கொடுப்பேன். அப்போது எனக்கு உண்டாகும் மகிழ்ச்சி இருக்கிறதே. அப்பப்பா! உலகத்தையே வென்றது போல் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையும் இதைப்போல பல துண்டுகளாக சிதறி கிடக்கிறது. கல்வி, வேலை, பணம், மனைவி, பிள்ளைகள், குடும்பம், நண்பர்கள் என்று ஒவ்வொரு துண்டுகளையும் நேர்த்தியாய் ஒரு குயவன் பானையை நெய்வது போல அழகாய் நம் வாழ்க்கை வரைபடத்தில் இணைக்கிறோம். சிறு வயது முதல் இதே வேலையைத்தான் நாம் செய்து வருகிறோம். வயது ஏற ஏற ஒவ்வொன்றாய் இணைக்கிறோம்.


இந்த இணைப்பு வேலைக்கு இரண்டு வகை பசைகளை உயயோகிக்கிறோம். நன்மை எனும் பசை ஒன்று. தீமை எனும் பசை ஒன்று. நன்மை எனும் பசையில் உள்ள கலவை நல்ல எண்ணங்கள், நற்செயல்கள், நன்றியறிகிற தன்மை, பிறருக்கு தீங்கு விளைவிக்காமை முதலிய இன்னும் பெரிய லிஸ்ட்டே போட வேண்டிய அளவுக்கு உள்ள நன்மையான காரியங்களை உள்ளடக்கியது.

அதேபோல தீமை எனும் பசையில் உள்ள கலவை தீய எண்ணங்கள், தீயசெயல்கள், நன்றியறிதலில்லாத தன்மை, பிறருக்கு எப்போதும் தீங்கு விளைவித்தல் முதலிய வேறு என்னென்ன கெட்ட காரியங்கள் உண்டோ அத்தனையைம் உள்ளடக்கியது.

எந்த பசையை உபயோகிக்கவும் உங்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த பசையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்க்கை இன்பமயமாகவோ அல்லது துன்பமயமாகவோ அமையும். இது நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை. நீங்களே உங்கள் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்வதில் உள்ள உண்மை உங்களுக்கு விளங்கும்.

இந்த இணைக்கும் வேலையில் சில நேரங்களில் தவறு நேரிடுகிறது. அப்போது அதனால் ஏற்படும் இன்னல்களினால் துன்பமுறுகிறோம்.

எத்தனை துண்டுகளை எப்படி இணைக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் உங்கள் வாழ்க்கை. சிலர் இந்த துண்டுகளை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். துன்பமுற்று அலறுகிறார்கள்.

சிலர் நேர்த்தியாய் ஒன்று சேர்த்து இன்பமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

எல்லா துண்டுகளையும் ஒரு மனிதன் இணைக்க முடியுமா? முடியாது. ஏன்? என்று கேட்கிறீர்களா?

நீங்கள் எல்லா துண்டுகளையும் இணைக்க வேண்டுமென்றால் அங்குதான் இறைவனோடு உள்ள தொடர்பு குறிதத விஷயம் வருகிறது. நம் வாழ்க்கையில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது. சிகரெட்டோ, மதுவோ, மாதுவோ, சினிமாவோ வேறு எதுவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

முடிவாக, நம் வாழ்க்கை வரைபடத்தில் கடவுளுக்கென்று ஒரு வெற்றிடம் உண்டு. அதை நிரப்புகிற வரை நமக்கு வாழ்க்கை திருப்தியளிப்பதில்லை.

இப்போது புரிகிறதா? ஏன் நமக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவில்லை என்று.

Tuesday, October 18, 2011

நான் ரசித்த ஜோக்ஸ் 10:

நான் படித்து ரசித்த ஜோக்குகள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. “ டாக்டர், எனக்குப் பிரஷர் அதிகமா இருக்கு “
“ என்ன பிரஷர்? லோ-பிரஷரா? ஹை-பிரஷரா? “
“ அந்தப் பிரஷர் இல்லை. நாலா பக்கமும் கடன்காரங்க
பிரஷர் அதிகமாயிருக்கு. ஆயிரம் ரூபாய் கடன் தாரிங்களா? “

2. கணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா?
மனைவி: ஆமா! எப்படி கண்டுபிடிச்சீங்க? நீட்டா இருக்கா?
கணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து
நைட்டு பையிலருந்து சில்லறை கீழெ
விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்
பெருக்கினியான்னு கேட்டேன்.

3. “ என் மனைவி இறந்துபோய்விட்டால் நான் மறுமணமே
செய்துக்க மாட்டேன்.”
“ அவளைப் போல மனைவி அமைய மாட்டாளேன்னு
அச்சமா?”
“இல்லை. அமைஞ்சுடுவாளோன்னு பயம்தான். “

4. நீதிபதி: உனக்கு என்ன வயசு?
கைதி: ஐம்பதுங்க.
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.

5. நர்ஸ்: தூங்குவதற்கு மாத்திரை போட்டுக்கச் சொன்னேனே. போட்டீங்களா?
நோயாளி: ஸாரி! மறந்து போய்த் தூங்கிட்டேன்.

6. ஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா
பிறக்கணும்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா?

7. “ அம்மா ராப்பிச்சை! சோறு போடுங்க! “
“ ஏம்பா நீ பகல்லகூட வந்தே போலிருக்கே “
“ அது ஓவர் டைமுங்க. “

8. மாமனார்: நான் செஞ்ச ஸ்வீட் எப்படி இருக்கு!
மாப்பிள்ளை: முதல் ஸ்வீட் இப்போது வேண்டாம்.இரண்டாவது ஸ்வீட்
எப்போதும் வேண்டாம்.

9. நீதிபதி: பாலத்துக்கு அடில வெடி வச்சி தகர்க்க திட்டம்
போட்டது நீதானே?
கைதி: பாலத்துக்கு அடில தீபாவளி கொண்டாடினேன். இது
தப்புங்களா?

10. கணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு
நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
மனைவி: ஏன் நல்லா இல்லையா?
கணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே.
அதான் கேட்டேன்.


குறிப்பு: அடுத்த சிறந்த ஜோக்ஸ் பத்து மற்றொரு பதிவில்.

Monday, October 17, 2011

எதற்குமே சிரிக்க மாட்டேன் என்ற கொள்கை [ No Smiling Policy ]வைத்திருப்பவரா நீங்கள்?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத் துளி!

சிலர் எதற்குமே சிரிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவராய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. "சார்! எப்பவுமே சிரிச்சிகிட்டே இருக்கக்கூடாது சார். நம்மள இளிச்சவாயன்னு முடிவு பண்ணிருவாங்க. ஈஸியா
ஏமாத்திருவாங்க சார். பாத்து பக்குவமா இருங்க" அப்படின்னு சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கையைக் குறித்து இவரைப் போன்ற மனிதர்களின் அளவுகோல் எனக்கு வியப்பை தருகிறது. சில அசாதாரணமான சமயங்களைத் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் நிரந்தர புன்னகை ஒன்று நம் முகத்தில் பூத்திருப்பதில் தவறொன்றுமில்லை.

பொதுவாக நாம் புகைப்படம் எடுக்கும் நேரங்களில் எல்லாம் சிரித்த நிலையில்தான் இருப்போம். புகைப்பட கலைஞர்களும் நம்மை அப்படி புன்னகைக்கும்படி வற்புறுத்துவார்கள். அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் சில மாநிலங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக புகைப்படம் எடுக்கும்போது சிரிக்கக்கூடாது என்று சட்டமே போட்டிருக்கிறார்கள் தெரியுமா? வியப்பாக இருக்கிறதா? ஏன் தெரியுமா? போலி வாகன ஓட்டுனர் உரிமதாரர்களை கண்டுபிடிக்கத்தான். பழைய குற்றவாளிகளை அவர்களின் புகைப்படங்களோடு அவர்களைப் பற்றிய முழு விபரங்களோடு கணினியில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் புதிதாக லைசென்ஸ் எடுக்கும்போது உங்கள் புகைப்படங்களை பழைய புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பழைய குற்றவாளிகள் புதிதாக லைசென்ஸ் வாங்கினால் சிஸ்டம் அவர்களை காட்டிக்கொடுத்து விடும். உங்கள் முகங்களை உணர்ச்சி அற்ற நிலையில் வைத்திருந்தால் மட்டுமே தொழில்நுட்பரீதியில் இது சாத்தியமாகும். மாறாக நீங்கள் சிரித்துக் கொண்டோ, கோபப்பட்டுக்கொண்டோ அல்லது வேறு எந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தாலும் கணினி உங்களை அடையாளம் கண்டுகொள்ள திணறும். ஆகவே உங்கள் முகங்களை இப்படி சாதாரண நிலையில் (Neutral Facial Expression) வைக்கும்படி வற்புறுத்துகிறார்கள்.

கணினிக்கு சரி. நம் வாழ்கைக்கு இந்த கொள்கை ஒத்து வருமா? நிச்சயமாக இல்லை. நாம் ஒன்றும் இயந்திர மனிதர்கள் இல்லை. நமக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை உங்கள் முகமே காட்டிக்கொடுத்து விடும். நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா? என்பதை உங்கள் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆகவே எப்பொழும் புன்னகையோடு இருங்கள். உங்கள் கண்களை ஏறெடுத்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும் தேவையுள்ள எத்தனையோ பாவப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்தானே? அவர்களை நோக்கி செல்லுங்கள். அவர்களுக்கு எவ்வளவோ தேவைகள் உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களோடு ஒருவேளை உணவை பகிர்ந்து கொள்ளுங்கள் .குறைந்த பட்சம் அவர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். அட ஒன்றும் வேண்டாம். அவர்களைப் பார்க்கும்போது ஜஸ்ட் ஒரு புன்னகையாவது புரியுங்கள். இது கூடவா உங்களால் முடியாது! உங்கள் ஒரு புன்னகை அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும். அட நேற்றுவரை இந்த மனிதர் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார். இன்று நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாரே என்று உங்களை வியப்போடும் அன்போடும் பார்ப்பார்கள்.

தன்னலமாக வாழாதிங்க! கொஞ்சம் பொதுநலத்தோடும் வாழ பழகிக்கோங்க ப்ளிஸ். ஆகவே புன்னகை சாதாரண விசயமல்ல அது மனித மனங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும் மிகச்சிறந்த செயலாகையால் அதை இன்றைக்கே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

உங்கள் முகங்களில் புன்னகைப்பூ பூக்கும்போது உங்கள் துன்பப் பூ ஓடிவிடும். மறக்காதிங்க.

Saturday, October 15, 2011

சத்தம் இல்லாத உலகம் வேண்டும்.

இன்றைய சிந்தனைத்துளி:

சத்தம்! சத்தம்! ஒரே சத்தம்! வீட்டில் சத்தம். ரோட்டில் சத்தம். அலுவலகத்தில் சத்தம். எங்கெங்கு காணினும் சத்தமடா! என்று அலுத்துக்கொள்கிறீகளா. உண்மைதான். இது சத்தமான உலகம்தான். சத்தம், கூப்பாடு, அலறல் போன்ற சத்தங்கள் நிறைந்த உலகம்தான்.

சிலர் சத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தனிமையை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல் அச்சத்தைப் போக்கிக் கொள்ள சத்தத்தை பயன்படுத்துகிறார்கள்.

நம் வீட்டில் அனைவருக்கும் எங்காவது ஊருக்குப் போயிருப்பார்கள். இரவு நேரமாகிவிட்டால் பயத்தைப் போக்க டி.வியைச் சத்தமாக வைப்போம். இது எதற்காக? தங்கள் மனதில் தனிமையினால் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதற்காகத்தான்.

சிலர் தங்கள் சத்தங்களினால் நல்ல தங்கள் சிந்தனைகளையும் பூட்டி விடுகிறார்கள். எப்போதும் இசை கேட்பது, அரட்டை அடிப்பது, டி.வி. பார்ப்பது. என்று பிசியாக இருப்பது போல் நடித்துக்கொண்டு தங்கள் சிந்தனை ஊற்றுகளை அடைத்து விடுகிறார்கள். நல்ல சிந்தனைகள்தான் செயல்களாக மாறி நாட்டில் பெரிய பெரிய மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பதையே தவிர்த்து விடுகிறார்கள்.

தனிமையை தவறாக பயன்படுத்தாமல் முறையாய் பயன்படுத்தியதால்தான் மனிதகுலத்திற்கு அரிய கண்டுபிடிப்புளெல்லாம் பொக்கிஷங்களாய் கிடைத்திருக்கின்றன.

உங்கள் தனிமையை பயனுள்ளதாய் அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.

அமைதியை விரும்புவர்களுக்கு இந்த உலகில் ஒதுங்க இடம் கிடைப்பது கஷ்டம்தான்.

சரி. நமக்கு அமைதி வேண்டும். என்ன செய்யலாம்?

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

குடம் நிறைய தண்ணீர் இருக்கிறது. தூக்கிப்பாருங்கள். என்ன கனம் கனக்கிறது? அதே குடத்தை நீங்கள் தண்ணீருக்குள் தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு எளிதாய் இருக்கிறது.

இறைபக்தி உங்களுக்குள் பொங்கும்போது மனம் எளிதாகிவிடுகிறது.

எல்லாம் நான் நான் நான்தான். எல்லாவற்றிற்கும் நானே காரணம். நானேதான் எல்லாவற்றையும் சகிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம்தான் உங்கள் துன்பத்திற்கு காரணம்.

சரி. வேறென்ன செய்வது என்கிறீர்களா?

நமது கடமையை ஒழுங்காய் செய்வோம். விளைவுகளை இறைவனிடம் விட்டுவிடுவோம். அப்போது அமைதி எனும் நதி உங்கள் உள்ளங்களில் வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டேயிருக்கும்.

Friday, October 14, 2011

உங்களுக்கு யார் எஜமானன் நீங்களா? உங்கள் வாயா?

இன்றைய சிந்தனைத் துளி:

வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு நம் வாய்தான் காரணமாகிறது. வாய் அடக்கம் இல்லாததால் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கோடி கோடி பேர்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உண்டு. அந்த பெற்றோர்களுக்கு 5 பெண் பிள்ளைகள். அதில் இந்த பெண்தான் கடைக்குட்டி. நான்கு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. கணவன், பிள்ளைகளென்று சந்தோஷமாய் வாழுகிறார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு இப்போது வயது 38 ஆகிவிட்டது. இன்னும் திருமணமாகவில்லை. அவளின் தாய், தகப்பனும், சகோதரனும் அழாத நாளில்லை. காரணம் இவளின் வாய்தான். பள்ளியில், கல்லூரியில், தெருவில் இவளின் கோபம், சண்டைகள் பிரசித்தம். “ நான் பேசினா கரெக்டா பேசுவேன். உள்ள ஒண்ணு வச்சி வெளிய ஒண்ணு பேச எனக்குத் தொpயாது” இதுதான் அவளது வழக்கமான டயலாக். இப்படி அவளாகவே அவளுக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு தான் பேசுவதுதான் சரி. மற்ற மனிதர்களெல்லாம் அயோக்கியர்கள். யாருக்கும் புத்தியில்லை என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்ததால் வந்த வினையைப் பாருங்கள். அவளைப் பார்த்தவுடனே எல்லோரும் ஒதுங்கி ஓடக் கூடிய நிலையை உண்டுபண்ணியிருந்த படியால் அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இன்னும் கன்னிகழியாத மங்கையாய் வாழ்ந்து வருகிறாள்.

இது ஒரு சாம்பிள்தான். எத்தனையோ வீடுகளில் இதைப்போன்ற பெண்களும், ஆண்களும் இருந்துகொண்டுதான் வருகிறார்கள். இவர்கள் சாதித்தது என்ன?
இவர்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவர்களின் வாய்தான்.

உங்களுக்கு நீங்கள் எஜமானாய் இல்லாமல் உங்கள் வாயை எஜமானாய் வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவுபெறும். உறவுகள் உடையும். வாழ்க்கை எனும் பூந்தோட்டம் வசந்தமில்லாமல் வாடிப்போகும்.

பேருந்திற்குள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யோசித்துப் பாருங்கள் பேருந்தை கட்டுப்படுத்துவது எது?

ஸ்டியரிங்தானே? அந்த சிறிய கருவி எவ்வளவு பெரிய பேருந்தை கட்டுப்படுத்துகிறது. அது தன் கடடுப்பாட்டை இழந்து பழுதானால் என்னவாகும் யோசித்திர்களா?

ஸ்டிரியங்கைப் போல்தான் நாக்கும். நமது முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் கருவியாய் இருக்கிறது

ஆகவே, முடிவாக

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே எஜமானாக இருங்கள். உங்கள் வாயை உங்கள் சொற்படி கேட்கும் வேலைக்காரனாக நடத்துங்கள்.

உங்கள் வாழ்க்கைப் பூமலரும்! வசந்தங்கள் தேடி வரும்.

Wednesday, October 12, 2011

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

தலைப்பைப் பார்த்ததும் உங்கள் கற்பனை எங்கே சென்றாலும் சரி. அது பற்றி எனக்கு கவலை இல்லை.

நீங்கள் வளமாய் சிந்திக்கவேண்டும். நம் சிந்தனைகள் வளம்பெற வேண்டும். அதன் மூலம் நீங்கள் பெருவாழ்வு பெற்று வாழவேண்டும் என்பதே என் நோக்கம். இந்த உடலுக்காக அதன் இச்சைகளுக்காக தீனிபோடும் எத்தனையோ வலைப்பதிவுகள் இணையத்தில் உண்டு. என்னுடைய வலைப்பதிவு வித்தியாசமாய் நம் ஆன்மாவுக்காக அந்த ஆன்மாவின் வாழ்விற்காக இருக்க வேண்டும் என்று விரும்பியே வலைப்பூவைத் தொடங்கினேன். தினமும் ஒரு நற்சிந்தனையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நல்வாழ்வு வாழ நற்சிந்தனைகளே நமக்குத் தேவை. மன அழுத்தத்தினால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டு மன நலிவுற்று, உடல் நலிவுற்று, நோயுற்று வாழ்கின்றனர். முடிவில் தற்கொலை செய்து மாண்டு விடுவோரும் உள்ளனர். நம் வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள் மனநலம் பெற்று உயர்வாழ்வு வாழ வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் எழுத தீர்மானித்துள்ளேன். சரி. அது போகட்டும். இன்றை நற்சிந்தனைக்கு வருவோம்.

இன்றைய தலைப்பென்ன?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு மனிதர்கள் வசிக்கின்றனர். உதாரணமாக உங்கள் பெயர் சுந்தர் என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்குள் நல்ல சுந்தர் என்ற மனிதனும், கெட்ட சுந்தர் என்ற மனிதனும் உள்ளனர். வெளியே தெரிகிற சுந்தராகிய (அதாவது கண்களால் பார்க்கிற சுந்தர்) வெளிமனிதனாகிய சுந்தர் அவ்வளவு நல்ல ஆள் இல்லை. நல்ல ஆள் என்ன நல்ல ஆள். கெட்ட சுந்தர்தான். ஆனால உள்ளே உள்ள மனிதனாகிய (உள்மனிதன்) சுந்தர் எப்போதுமே நல்ல மனிதர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் உபயோகப்படுத்தும் மனிதன் இந்த கெட்ட சுந்தராகிய வெளிமனிதனைத்தான். கோபம், வெறி, சண்டை, பெண் ஆசை, போக்கிரித்தனம், ரவுடித்தனம், பண ஆசை இன்னும் எத்தனை எத்தனை கெட்ட குணங்கள் உண்டோ அத்தனையும் நிறைந்தவன்தான் இந்த வெளிமனிதன். நம் உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. அதுதான் இந்த மனிதகுலத்தின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது. மாறாக உள்ளே உள்ள உள்மனிதனோ அன்பு, பண்பு, பாசம், மனிதத்தன்மை, இன்னும் எத்தனை நல்ல குணங்கள் உண்டோ அத்தனை நல்ல குணங்களையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் நல்ல மனிதனாவான். ஆனால் இந்த உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. இப்போது இப்பதிவின் தலைப்பைப் பார்ப்போம். நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்? உங்கள் உள்மனிதனுக்கா? அல்லது வெளிமனிதனுக்கா?

முதலில் உள்மனிதனைக் கவனிப்போம். உள்மனிதனுக்கு சாப்பாடு என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பது, ஆபாச புத்தகங்களை தவிர்ப்பது, ஆபாசத் திரைப்படங்களைத் தவிர்ப்பது, தெய்வ பக்தி முதலிய நல்ல ஆகிய நல்ல காரியங்களை செய்யும்போது உங்கள் உள்மனிதனுக்கு நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். அவன் நல்ல திடமாக வளர்கிறான். உங்கள் ஆன்மாவும் வளர்ச்சி பெறுகிறது. அதன் மூலம் உங்கள் வாழ்வும் வளம்பெறும்.

மாறாக நீங்கள் உங்கள் வெளிமனிதனுக்கு சாப்பாடு எப்படி போடுகிறீர்கள் என்றால் என்ன நடக்கும்? ஆபாச புத்தகங்கள், ஆபாசத் திரைப்படங்கள், இன்டெர்நெட்டில் ஆபாசக்குப்பைகளை மேய்வது, கோபப்படுவது, மது அருந்துவது, சிகரெட் குடிப்பது, கஞ்சா, அபின் முதலிய போதை வஸ்த்துக்களை சாப்பிடுவது இன்னும் நாம் செய்யும் எத்தனையோ தீய செயல்கள் இவைதான் நம் வெளிமனிதனுக்கு சாப்பாடு கொடுக்கும் விஷயங்கள்.

நீங்கள் உங்கள் உள்மனிதனுக்கு நன்றாக சாப்பாடு போட்டு கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கையும் செழிக்கும்.

மாறாக உங்கள் வெளிமனிதனுக்கு தொடர்ந்து சாப்பாடு போட்டு அவனை கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவடைந்து நாசமாய்ப் போகும்.

இப்போது சொல்லுங்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுவீர்கள்?



குறிப்பு: அடுத்த நற்சிந்தனை அடுத்த பதிவில்.

Tuesday, October 11, 2011

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நம் பதிவுலக நண்பர்கள் சில பேர் திருட்டுப்பதிவைப் பற்றி எவ்வளவோ எழுதித்தான் வருகிறார்கள். ஆனாலும் இந்த திருட்டுப்பதிவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகவே இந்த பதிவைப் பார்த்த பின்பாவது திருந்த வேண்டும். இல்லையேல் வருந்தவேண்டியிருக்கும்.

திருட்டுப்பதிவு போடும் கயவர்களே!

உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறீர்களா? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா? தாய்ப்பாலில் நீங்கள் விஷம் கலக்கிறீர்கள். ஆம். தாய்ப்பாலில் விஷம்தான் கலக்கிறீர்கள். இதைவிட அவமானகரமான விஷயம் வேறில்லை. ஒரு பதிவையிட எவ்வளவு கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?!. பதிவை இட சரக்கு இல்லையென்றால் ஏன் வலைப்பூ ஆரம்பிக்கிறீர்கள். அசிங்கமாக இல்லையா? ஒரு பதிவை இட எவ்வளவு நேரமெடுத்து, எவ்வளவு யோசித்து, மூளையை கசக்கி ஒரு தாய் பிள்ளையை பிரசவிக்கிறதுபோலத்தான் ஒவ்வொரு பதிவையும் இடவேண்டியிருக்கிறது. நீங்கள் எங்கள் பிள்ளைகளை எடுத்து உங்கள் பிள்ளைகளென்று பேரிட்டு பொய்ப்பெருமை பெற்றுக்கொள்கிறீர்கள். இனி இவ்விதம் செய்யாதீர்கள்! செய்தால் என்ன என்று கேட்கிறீர்களா?

உங்களை பதிவர்களென்று அழைத்துக்கொள்ளாமல் விபச்சாரிகள் என்று வேண்டுமானால அழைத்துக்கொள்ளுங்கள்..!!!.

குறிப்பு: பாதிக்கப்பட்ட வலைப்பதிவர்களின் சார்பாக இந்த சிறிய பதிவை இடுகிறேன். பின்பு சமயம் வாய்த்தால் பெரிய பதிவாக இடலாம் என நினைத்திருக்கிறேன். அதன் பிறகாவது இந்த கருங்காலிகள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.

Monday, October 10, 2011

எப்படி வாழ வேண்டும்?

இந்த பேஸ்புக் தலைமுறைக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காய்தான் என்பது எனக்குப் புரி கிறது. ஆனாலும் சங்க இலக்கியப் பூக்களிலுள்ள சில தேன்துளிகளை உங்களுக்கு பருகக் கொடுப்பது எனக்கு சரி என்று படுகிறது. பருகிய பின் நீங்களும் என் கருத்துக்கு தலையாட்டுவீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களை இரண்டு வகையாக பிரி க்கலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பவர்கள் இரண்டாம் வகை. இரண்டாம் வகையினருக்காக சங்க இலக்கியமான தொல்காப்பியம் சில ஆலோசனைகளைச் சொல்கிறது?

என்னவென்று பார்ப்போமா?

பாடலையும் அதன் பொருளையும் தருகிறேன்.

முதலில் பாடல்.

“ பரி வும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊணுன் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்மின் தனம் பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வௌளைக் கோட்டியும் விரசில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேகத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென. “

பாடலின் பொருள்:

ஆசையையும், ஆசையினால் ஏற்படும் துன்பத்தையும் விட்டொழியுங்கள்: தெய்வம் உண்டு என்று அறிந்துகொள்ளுங்கள்: அறிவுள்ளவர்களை ஆதரியுங்கள். பொய் கூறுவதற்கு பயப்படுங்கள். புறங்கூறலில் ஈடுபடாது (அதாங்க கோள்சொல்லுறது) உண்மையைப் போற்றுங்கள்: புலால் உணவை (அசைவ உணவு) விலக்குங்கள்: உயிர்க்கொலைகளைப் புரியாதீர்கள் (மர்டர் பண்ணாதீங்க): தானம் செய்யுங்கள்: தவம் பல செய்யுங்கள்: செய்ந்நன்றி மறவாதீர்கள்: தீய நட்பினரை இகழந்து நீக்குங்கள்: பொய்சாட்சி சொல்லாதீர்கள்: பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள்: நல்லோருடன் சேருங்கள்: கெட்டவர்களுடன் சேராதீர்கள்: பிறன்மனை விழைவதற்கு (மற்றவரி ன் மனைவியை செட் பண்றது) அஞ்சுங்கள்: உயிர்கள் யாவையும் நேசியுங்கள் . பாவம் செய்யாதிருங்கள்: பொய், களவு, காமம், அறிவிலார் சேர்க்கை என்பவற்றை விவேகமாக ஒழியுங்கள்: இளமை, செல்வம், யாக்கை (உடல்), நிலையாதன (நிலையற்ற தன்மை) என்னும் உண்மையை நினைவிற் கொள்ளுங்கள்: நாம் வாழுகின்ற நாட்களை எவ்வழியிலும் வீண்நாட்களாக்கி விடாமல் முடிந்தளவில் அறம்புரி யுங்கள்: மேலோர் ஆகுங்கள்: இவ்வாறு வளம் பொருந்திய இப்பூமியில்
வாழ்வாங்கு வாழ்வீர்கள்களாக!

இப்படித்தான் வாழவேண்டும் என்று தீர்மானித்து தொல்காப்பியத்தின் வழிகாட்டுதலின்படி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

(எல்லாப் பதிவும் இப்படியே இருக்காது. பயப்படாதீங்க. அப்பப்ப நம்ம வலைப்பூ பக்கம் வர தவறாதீர்கள். இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.)

Saturday, October 8, 2011

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்களா?

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்கள? வாங்க. நம் சிந்தனைத் துணிகளை நற்சிந்தனை எனும் உஜாலாவில் நனைத்து மணக்க வைப்போம்.

இன்று… இந்த 21-ஆம் நூற்றாண்டில்… நம் சிந்தனைகள் மாசுபட்டுப் போய்விட்டன. செல்போன், இண்டெர்நெட், மெமரி கார்டுகள் உபயோகத்தில் நம் சிந்தனைகள் 99% காமவிகார சிந்தனைகளாகவே ஆகிவிட்டன. ஆடை அவிழ்த்துப் பார்க்கும் நம் பார்வைகள் மாற வேண்டும். உடுக்க உடையில்லாமல், உண்ண ஒருவேளை உணவில்லாமல் தவிக்கும் எத்தனையோ கோடி மக்களின் கண்ணீர்த்துளிகள் உலகெங்கும் சிந்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன ஒவ்வொரு மணித்துளிகளிலும். ஆனால் நாமோ செல்போன் மெமரிகார்டுகளில் ஆபாசக்குப்பையை அள்ளி வைத்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
எவன் அழிஞ்சா எனக்கென்ன? யார் எப்படிப் போனா எனக்கென்ன? என்று நம் கடமையைச் (???!!) சரியாகச் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

அட என்ன சார் இது! பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிங்களே!
எப்படிப்பட்ட அவசர யுகத்தில இருக்கோம். நாலு பேர மிதிச்சு ஏறிப் போய்க்கிட்டே இருந்தாத்தான் நாம நல்லா இருக்கமுடியும். போங்க… போங்க சார்.. வேலையைப் பார்த்துகிட்டு. அப்படின்னு சொல்றீங்களா?.....

கொஞ்சம் சிந்திங்க சார்!

பெரும்பான்மை கூட்டம் அப்படி வாழட்டுமே. நாம ஒரு சிறுபான்மை கூட்டமா இருந்தாலும் பரவாயில்ல. நம்மள மாதிரி ஆள்கள் இருக்குறதுனாலதான் கடவுள் இந்த பூமியை அழிக்காம ரன் பண்ணிக்கிட்டு இருக்குறாரு. உங்களுக்கு தெரியுமா?

அதுனால் தயவு செய்து…. இனியாவது தினமும் யாருக்காவது உதவி செய்ங்க.
தினமும் காலையில் கண்விழித்தவுடன் இன்று நம்முடைய மனத்தாலாவது, பணத்தாலாவது, என் உழைப்பினாலாவது, ஒரு நன்மையாவது ஒருவருக்காவது செய்வேன் என்று தீர்மானம் எடுங்க.

இதுனால் என்ன நன்மை அப்படிங்கறீங்களா?

உங்க மனசு ஆரோக்கியமா இருக்கும். இன்னிக்கு ஒரு ஜீவனுக்காவது பிரயோஜனமா வாழ்ந்திருக்கோம் அப்படிங்கற எண்ணத்தாலு ஒரு பொpய சந்தோஷம் உண்டாகும். உங்க மனசு சந்தோஷப்படுறதால உங்க உடலும் சந்தோஷப்படும். அதாவது நோய்களை நோய்கிருமிகளை அழிக்கக் கூடிய எதிர் உயிரிகளும்அதிகமா உற்பத்தியாகும். மனதும் உடலும் உங்களை வாழ்த்தும்.

பிறகென்ன? ஆரோக்கியமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்கதானே? வாழ்க வளமுடன்!

Friday, October 7, 2011

கோழிக்கனவும் என் கிரிக்கெட் கதையும்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் நம் அணி வாங்கிய செமத்தியான அடியை கண்ட உங்களைப்போலவே நானும் எரிச்சல் அடைந்து இனி கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து நிம்மதியாக படுக்கையில் சரிந்தேன்.

ஒரு கனவு கண்டேன். இனி என் கனவு.

ஒரு பெட்டைக்கோழி குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது. " சே! இனி இந்த சேவல் கிட்ட சேரக் கூடாது. எத்தனை தடவைதான் பிள்ளை பெத்துக்கிடறது. இனி நம்மள முடியாதுடா சாமி" என்று நினைத்தபடி விரதத்தை ஆரம்பித்தது. இரண்டு நாள் போயிருக்கும். அன்று குப்பைமேட்டில் வழக்கம்போல் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது வந்தது ஒரு ஆஜானுபாவான சேவல். கிட்ட வந்து கொஞ்சியபோது கோழிக்கு தேகம் உருகத் தொடங்கியது. பிறகென்ன? வழக்கம்போல ஆசைநாடகம் அரங்கேறியது அங்கே. 50 நாட்கள் கழித்து மறுபடியும் ஏழெட்டு குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே நினைத்தது 'இது இயற்கையின் நியதி. சுயக்கட்டுப்பட்டினால் பலனில்லை" என்று.

கனவு முடிந்து கண்விழித்தேன். மாலையில் டிவியை ஆன் செய்தால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட். பெங்களுரு Vs சவுத் ஆஸ்திரேலியா மேட்சை பார்க்க ஆரம்பித்தேன்.

கதைக்கும் கனவுக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து சிரித்தேன்.

Tuesday, October 4, 2011

திருந்துவார்களா சில ஜென்மங்கள்?

சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன நிஜ சம்பவம் இது. அவருடைய வாய்மொழியாகவே இதை தருகிறேன்.

“தூத்துக்குடி ரோட்டோரங்களில் சமீப காலமாக ஒரு பிச்சைக்காhp தனது நான்கு குழந்தைகளுடன் பிச்சையெடுப்பதைக் காணமுடிந்தது. அவளுக்கு நான்கு பிள்ளைகள். ஒரு வயதிலிருந்து 7 வயது வரை அடுக்கடுக்காய் நான்கு பிள்ளைகள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் புருஷன் இவளை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறான். குழந்தை உண்டாகும் வரைக்கும் குடும்பம் நடத்துவானாம். பிறகு எங்காவது ஓடிப்போய்விடுவானாம். பிறகு குழந்தை பிறந்ததும் மறுபடியும் வந்து விடுவானாம். இப்படியே நான்கு குழந்தைகள் பிறந்ததும் பிறகு ஓடிப்போனவன் மறுபடியும் வரவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் சில மனித மிருகங்கள் இவளை வேட்டையாடியதில் இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளாய் மாறிவிட்டாளாம்”

இவை என் நண்பர் சுயமாய் முயன்று திரட்டிய தகவல்கள். கேட்டவுடன் என் கண்கள் பனித்;தது. தன் உடல்பசிக்காக ஒரு பெண்ணை பயன்படுத்தும் இவனைப் போன்ற கயவர்கள் என்று திருந்துவார்களோ? தொpயவில்லை.