Wednesday, August 29, 2012

ஓ துறவிகளே!




ஓ துறவிகளே!
மீசையைத் துறக்கச் சொன்னீர்கள்
துறந்துவிட்டோம்
உள்ளே முளைத்திருக்கிற
இந்த
ஆசையை
என்ன செய்வது?

உடையை மாற்றச் சொன்னீர்கள்
மாற்றி விட்டோம்
உள்ளே மறைந்திருக்கிற
இந்த
படையை
என்ன செய்வது?

வெளியே மட்டுமல்ல
உள்ளேயும் போராடி போராடி
ஓய்ந்துவிட்டோம்

ஒன்று
போர் ஓயட்டும்
இல்லை
உங்கள் பிரசங்கம் ஓயட்டும்!



.

Thursday, August 23, 2012

மனக் கழுதை





வேங்கையைப் போல்
சீறி எழ நினைத்த
என் மனக் கழுதை
ஓரமாய் படுத்துக்கொண்டது
தெருநாயைப்போல.



.

Saturday, August 11, 2012

சிலந்திப் பாடம்






வெடித்துக் கிளம்பும்
புத்தகப் புழுக்களை
அப்படியே சாப்பிடுவதா
பொறித்துச் சாப்பிடுவதா
குழம்பியபடியே
கிறங்கிப் போய்
வேதாளம் போல்
சுற்றியதில்
சுவரெங்கும் ஓவியங்கள்

சுற்றிச் சுற்றி
தலைகீழாய் கவிழ்ந்தபோது
சிலந்திப் பாடம் படித்து
சீறிட்டெழுந்தேன்
நாகமாய்....!

ஏக்க கனவு


ஒரு எண்ணச் சுழல்
சுழன்று சுழன்று அடித்த வலியில்

சுருண்டு கொண்டது
மூளைப் பாம்பு

விதி வலியதென்று
தேற்ற முயன்ற கைகளுக்கு

வராதேயென கட்டளையிட்டது
கண்கள்

பீறிட்டெழும் வெள்ளச்சிதறலில்
கரைந்தது
அந்த
ஏக்கக் கனவு.




.