Friday, October 19, 2012

பரிணாமக் கொள்கையின் நம்பகத் தன்மை - பகுதி 1




பரிணாமக் கொள்கை எப்போதுமே எனக்குப் பிடிக்காத, ஒத்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. ஏன் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு கேலிக்கூத்து என்றே சொல்வேன். முட்டாள்தனமான ஒன்று என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. இன்றைக்கு ஆதாரமாக ஒரு விஷயத்தை பார்ப்போம்.


வௌவால்

இந்த வௌவால் அற்புதமான ஒரு படைப்பு. பரிணாமக் கொள்கைக்காரர்களுக்கு சவால் விடும் ஒன்றாக இருந்து வருகிறது. வௌவால் குட்டிப் போட்டு பால் கொடுக்கும் ஒரு பிராணியாகும். வெளவால்களில் மட்டும் 950 வகையான வெளவால்கள் இருக்கின்றனவென்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வௌவால்களில் மிகச் சிறிய வௌவால்கள் 1.5 கிராம் எடையுள்ளவைகளாகவும் 15 செ.மீ நீளமுள்ள இறக்கைகள் கொண்டனவாயும் இருக்கின்றன. இவைகளுக்கு ஆகாரம் சிறு சிறு பூச்சிகள்தான். பெரிய வௌவால்கள் 1 கிலோ எடை கொண்டவைகளாகவும் சாதாரணமாகவும் பழங்களை உணவாகக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. மத்திய அமெரிக்காவிலுள்ள வாம்பையர் என்ற ஜாதி வௌவால்கள் மிருகங்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் வகையைச் சேர்ந்தவை. அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கூர்மையான பற்களால் மிருகங்களின் தோலைக் கிழித்து இரத்தம் கசிந்தவுடன் அந்த இரத்தம் உறைந்து போகாமலிருக்க தங்கள் எச்சிலை கிழிந்த தோலின் மேல் துப்பி 20 கிராம் அளவு இரத்தத்தை குடித்து விடுகின்றனவாம்.

வௌவால்கள் மிருக இனத்தைச் சார்ந்தவைகளாக இருந்தாலும் வேகமாகப் பறக்க தோலினாலான இறக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை மூட மெல்லிய மூடியும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சாதாரணமாக வெளவால்கள் இரவு நேரத்தில்தான் இரை தேடப் போகின்றன. அவைகள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு கண்கள் உபயோகப்படுவதில்லை. அவைகளிலிருந்து ஒலி அலைகள், வினாடிக்கு 1,00,000 வீதம், அனுப்பப்படுகின்றன (மனிதருக்கு கேட்கும் சக்தி வினாடிக்கு 14,000 ஒலி அலைகள்தான்). இவ்வொலிகள் எதிரொலித்து வருவதை வைத்து பறப்பதற்கும், பூச்சிகளைப் பிடிப்பதற்கும் கடவுள் அவைகளுக்கு அவ்வளவு நுண்ணிய கிரகிக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இவைகள் சாதாரணமாக தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும்.

இவைகள் பறவை இனத்திலிருந்து சிறிது சிறிதாக மாறி பிராணி இனத்துக்கு வந்தனவா அல்லது மிருக இனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி பறவை இனமானதா? பரிணாமக் கொள்கைக் காரர் என்ன கூறுகிறார்கள்? மனிதனுக்கு இல்லாத எதிரொலியைக் கிரகித்து செயல்படும் சக்தி பெரும் அளவில் இந்தச் சிறு பிராணிக்கு கிடைத்திருப்பது தற்செயலாக உண்டான ஒரு காரியமா? அல்லது எல்லாம் வல்ல கடவுள் தமது சிருஷ்டிப்பில் செய்த அற்புதங்களில் இதுவும் ஒன்றா?

மனித இனத்தில் 50 கிலோ எடையுள்ள ஒரு பெண் 2 கிலோ எடையுள்ள ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதாவது பிள்ளை தாயின் எடையில் பதினாறில்ஒரு பாகம்தான் இருக்கிறது. ஆனால் வெளவாலோ தன் எடையில் நாலில் ஒரு பாகம் குட்டியின் எடையாக இருக்கும் அளவுக்கு பெரிதாக பெற்றெடுக்கிறது. இதுவும் பரிணாமக் கொள்கைக்கு ஒத்து வருமா? அல்லது கடவுளின் படைப்பின் விசித்திரமா?

கடவுள் ஒவ்வொரு பிராணியையும், பறவையையும், தாவரத்தையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே படைத்திருக்கிறார். அந்தந்த ஜாதிகளில் பலபல இனங்கள் பின்னால் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் கடவுளுடைய படைப்பில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனிப்பட்ட குணாதிசயங்களோடு அவைகளைப் படைத்திருக்கிறார். இந்த விசேஷ குணங்களை கடவுளின் படைப்பு என்பதை விடுத்து பரிணாமக்கொள்கைப்படி படிப்படியாக வந்தது என்பது சர்வ முட்டாள்தனமே அல்லாது வேறொன்றுமில்லை.


தொடரும்....!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

58 comments:

  1. "கடவுள் ஒவ்வொரு பிராணியையும், பறவையையும், தாவரத்தையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே படைத்திருக்கிறார். அந்தந்த ஜாதிகளில் பலபல இனங்கள் பின்னால் ஏற்பட்டிருக்கின்றன. "

    பரிணாம கொள்கை நூறு சதவீதம் நிரூபிக்கப்படவில்லை எனபது உண்மைதான். ஆனால் கடவுளின் படைப்பு கொள்கை ஒரு சதவீதம் கூட நிரூபிக்கப்படவில்லை என்பதும் உண்மை.

    KUMAR

    ReplyDelete
    Replies
    1. இல்லாத ஒன்றுக்குத்தான் நிரூபணம் தேவை. இருக்கிற ஒன்றுக்கு நிரூபணம் தேவையில்லை. கண்ணால் காண்கின்ற எல்லாமே கவனிக்கவும் எல்லாமே கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கின்றன. மரம், செடி, கொடி, உயிரினங்கள், அற்புத படைப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான மனித படைப்பு இவை அனைத்தையும் கவனிப்பீர்களாகில் அவற்றின் கைவேலைத்திறன் (Workmanship) விளங்கும்.தனிப்பட்ட முறையில் நானும் உணர்ந்தவன். ஆகையால்தான் சத்தியத்தை, உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பொய்க்குத்தான் நிரூபணம் தேவை. உதாரணமாக என் தகப்பன் இருக்கிறார் என்று நான் சொன்னால் நிரூபணம் தேவையில்லை. அவர் என் அருகிலேதான் இருக்கிறார் அல்லவா? அதே போல்தான் கடவுளும்.

      Delete
    2. \\உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பொய்க்குத்தான் நிரூபணம் தேவை. உதாரணமாக என் தகப்பன் இருக்கிறார் என்று நான் சொன்னால் நிரூபணம் தேவையில்லை. அவர் என் அருகிலேதான் இருக்கிறார் அல்லவா? அதே போல்தான் கடவுளும். \\ அட்ரா சக்கை...........அட்ரா சக்கை...........

      Delete
  2. சில தகவல்கள் வியப்பைத் தருகிறது... தொடர்கிறேன்...

    நன்றி சார்...tm1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. அன்புள்ள துரை டேனியல்,
    நல்ல படைப்பு. தொடருங்கள். பரிமான கொள்கை என்பது ஒரு நிருபிக்கப்படாத சிந்தனை மட்டுமே. அறிவியலில் எந்த சிந்தனையும் ஐயமற நிருபிக்கப்பட்டால் ஒழிய அதனை அறிவியல் உலகம் ஏற்றுகொள்வதில்லை. சில மத எதிர்ப்பு அரசியல் மற்றும் சில தவறான மத குருமார்களின் தொல்லைகளுக்கு உள்ளான ஆராய்சியாளர்களின் ஒரு பக்க சார்பு தான் கண்முடித்தனமாக பரிமான கொள்கையை தக்க வைத்து கொண்டுருகிறது.
    அப்துல் அஜீஸ்

    ReplyDelete

  4. நல்ல ஆய்வு துரை! சுவையாக உள்ளது தொடருங்கள் தொட்ர்வேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

      Delete
  5. வியப்புக்குறிய அறியாத தகவல்கள் சார்..
    உலகத்தில் ஒன்றும் பரினாமக் கொள்கையின் படி இல்லை சார்
    படிப்படியாக உருமாற்றி படைப்பதற்கு இறைவன் ஒன்றும் குறைந்த சக்கதி படைத்தவனில்லை ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொன்றைப் படைத்துள்ளான்.
    எல்லாப் படைப்பும் மனிதனுக்குப் பயன்படவே தான்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ. அருமையான கருத்துரைக்கும், தெளிவான புரிதலுக்கும் நன்றி.

      Delete
  6. பரிணாமம் என்பது ஒரு தியரிதான். உறுதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. நாத்திகர்கள் இறைமறுப்புக்காக பரிணாமம்தான் உண்மை என்பதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் சகோ. ராபின். இந்த பரிணாமவாதிகளால் எப்போதும் ஆபத்துதான். மார்க்க வழியில் செல்லும் ஒரு மனிதனுக்கும், பரிணாமத்தை நம்புகிற மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். வாழ்க்கையே வெளிப்படுத்தும். அதுவே சாட்சியும் கூட. (நான் எல்லோரையும் சொல்ல வில்லை. விதிவிலக்கும் உண்டு. ஆனா மெஜாரிட்டி இப்படித்தான்.)அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி! எப்போதும் உதவிக்கு வருகிற அன்புக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. இந்த விசேஷ குணங்களை கடவுளின் படைப்பு என்பதை விடுத்து பரிணாமக்கொள்கைப்படி படிப்படியாக வந்தது என்பது சர்வ முட்டாள்தனமே அல்லாது வேறொன்றுமில்லை.

    தெரியாத விஷயங்கள் பலவற்றை தெளிவுபடுத்திய பகிர்வு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  8. நல்ல ஆய்வு தெரியாத விஷயங்கள் பகிர்வு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கு நன்றி தாமஸ் சார். தொடர்ந்து தளத்துக்கு வருகை தாருங்கள். கருத்துரையிடுங்கள். நன்றி!

      Delete
  9. "பரிணாம கொள்கை நூறு சதவீதம் நிரூபிக்கப்படவில்லை எனபது உண்மைதான். ஆனால் கடவுளின் படைப்பு கொள்கை ஒரு சதவீதம் கூட நிரூபிக்கப்படவில்லை என்பதும் உண்மை.

    KUMAR"

    சூப்பர் கமெண்ட் !

    ReplyDelete
  10. பரிணாமத்தைப் பற்றி இந்த அளவுக்கு பலரும் எதிர்ப்பதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிரது. தம்முடைய மத நூலில் உள்ளது போல் இல்லாத ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள பலரும் தயாரில்லை என்பதே நிதர்சனம்.

    சூரியன் பூமியை சுற்றவில்லை மாறாக பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்ற சொன்ன கலிலியோவை வேடிகன் எவ்வாறு மிரட்டியது என்பது உலகறிந்த கதை. அதை மாற்றி எழுது என்று கொலை மிரட்டல் கூட கொடுத்து பார்த்தாங்க. ஓண்ணும் நடக்கல.

    இது ஒரு தொடர்கதை தான்.

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞானத்தை எதிர்க்கவில்லை. பரிணாமவியலைத்தான் தவறு என்று சொல்கிறோம். புரிதல் வேண்டும். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  11. நல்ல தகவ்ல் பகிர்வு.தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  12. No Comments Sir...but keep going...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தர்மசங்கடம் எனக்குப் புரிகிறது சகோ. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  13. அய்யய்யோ இப்பவே கண்ணை கட்டுதே

    ReplyDelete
  14. சகோ துரை டேனியல்!

    பரிணாமத்தைப் பற்றி கேள்வி கேட்டுட்டீங்களா?

    இனி டார்வினிஷ்டுகள் வாதங்களை வைக்காது உங்களுக்கு பரிணாமத்தை விளங்கும் அளவுக்கு அறிவு வளரவில்லை என்ற பழைய ரெகார்டையே திரும்பவும் கொண்டு வருவர்.

    இந்த டார்வினிஷ்டுகள் எந்த அளவு பித்தலாட்டக்காரர்கள் என்பதை இந்த பதிவில் சென்று படிக்காதவர்கள் தெரிந்து கொள்ளவும்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. தங்களது பதிவையும் படித்தேன். மிக அருமை. இந்த டார்வினிஷ்டுகளின் பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்வது? இவர்களை நாம் மதிக்க வேண்டியதில்லை. கடந்து போவோம்.

      Delete
  15. வணக்கம் டேனியல் அண்ணாச்சி,

    பரிணாமத்தை எதிர்க்காமல் உங்களால் எப்படி இருக்க முடியும்? படைப்புக் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது இயல்பான, இன்றியமையா விடயமும் கூட.

    பரிணாம கொள்கையை மத நம்பிக்கையாளர்கள் நம்பாவிட்டால் பரிணாமத்திற்கு நட்டம் ஒன்றுமில்லை. உலகின் பெரும்பானமை பல்கலைக் கழகம்,பள்ளிகளில் தமிழ்நாடு உட்பட்டு போதிக்கப்படுகிறது. ஆயிரக் கண்க்கில் ஆய்வுகள்,கட்ட்டுரைகள் என நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக வளர்கிறது.ஆகவே பரிணாமத்தின் நம்பகத் தன்மைக்கு எந்த குறையும் இல்லை.

    எனினும் வவ்வால் பற்றி பதிவு என்றதும் நம் தோழர் பதிவர் வவ்வாலோ என நினைத்து விட்டேன். அருமையாக ,விவரமாக வரலாறு, அறிவியல்,இயற்கைத் தொழில் நுட்பம் என விளக்கும் எனக்கு பிடித்த பதிவர்.

    வவ்வால் என்ற பாலூட்டி பற்றி தெரிய வேண்டும் என்றால் விக்கிபிடியா பார்த்தாலே போதுமே.
    http://en.wikipedia.org/wiki/Bat

    பறக்கும் குணம் பறவைகள் தவிர்த்து வவ்வாலிடம் ஏற்பட்டது இதனை ஒருங்கிணைந்த பரிணாமம் [convergent evolution]என்பார்கள்.

    http://en.wikipedia.org/wiki/Convergent_evolution

    விக்கிபிடியாவில் உங்களின் கேள்விகள் அனைத்துக்குமே விடை இருக்கிறது. ஆகவே மறுப்பு பதிவு அவசியம் இல்லை.அடுத்த பகுதியிலாவது எனக்கு வேலை கொடுங்கள்!!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்வாகன்! என்னடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன். உங்க வேலைய நீங்க செய்ங்க. எங்க வேலையை தொடர்ந்து நாங்க செய்றோம். என் பதிவை நல்லா படிச்சுட்டு கேள்விகளுக்கு பதிலச் சொல்லுங்க. அத விட்டுட்டு விக்கிபீடியாவப் பாருங்கன்னா என்ன பண்றது? உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.

      Delete
  16. ஐ !!!சகோ.சார்வாகன்

    உங்களுக்கு நான் வேலை கொடுக்கிறேன்....

    * எல்லாமே பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றால் பரிணாமம் அடையும் முன்னும் சரி, பின்னும் சரி ஏன் எல்லா உயிரினங்களுக்கும் உண்ணும் பகுதி முன்னாலும் கழிக்கும் பகுதி பின்னாலும் இருக்கிறது...மாற்றி ஏன் வரவில்லை..??

    * மாமிசம் கிழித்து உண்ணும் உயிரினகளுக்கு(மனிதன் உட்பட)மட்டும் எப்படி கோரப்பற்கள் இருக்கிறது...??? மற்ற தாவர உண்ணிகளுக்கு ஏன் இல்லை..???

    * விலங்குகளுக்கு அதனதன் எதிரியும் ,எதிரியின் தன்மைகளும் அவற்றை பார்க்காமலே தெரியும்...உதாரணதிற்கு எல்லோருக்கும் தெரிந்த உயிரினம் ஒரு கோழியை (தாயுடன் வளராத குஞ்சி) எடுத்துக்கொள்வோம் ...அது குஞ்சியாக இருக்கும் போதே அதன் எதிரி காகம், பூனையை பற்றி தெரிந்து கொள்கிறதே..அதன் பலகீனம் பற்றியும் யாரும் சொல்லி கொடுக்கவில்லை..காகம்,பூனை,நாய் வந்தால்(ஓடாது) செடிகளுக்குள்,இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும்.. ...கீரிப்பிள்ளை பிடிக்க வருகிறது என்றால் அந்த கோழிக்குஞ்சி ஓடாது,ஒழியவும் செய்யாது ..மேலாக குதிக்கும்..ஏன் கீரிப்பிள்ளைக்கு மேலாக குதிக்க முடியாது...(இது நான் என் அனுபவத்தில் பார்த்தது..நீங்கள் மற்ற விலங்குகளையும் சிந்திக்கலாம்)

    சார்வாகனின் எதிரி நான் (உதாரணத்திற்கு ) என்றால் என்னையும் தெரிந்திருக்க வேண்டும் என்னுடைய பலம்,பலகீனமும் தெரிந்திருக்க வேண்டும்...முடியுமா உங்களால்...???

    * சுனாமி ,நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் நடக்க போவது விலங்குகளுக்கு மட்டும் எப்படி முன்பே தெரிகிறது...?? மனிதனை விட பூமிக்கு கிட்டக்க இருப்பதாலா..???அப்படினா தரையிலேயே படுத்து தூங்கிகிட்டு கிடக்கும் மனிதனுக்கு ஏன் தெரியவில்லை...??ஏன்ன பலபேரு தூக்கதுலேயே போயிட்டாங்க..

    * மனித இனத்தோடு அதிகமாக் ஒத்து போகிற குரங்குகள் ஏன் புது புது டெக்னோலோஜியை மனிதன் போல இன்னும் கண்டுபிடிக்க வில்லை...???எப்போது கண்டுபிடிக்கும்..???

    * அறுதப்பழசான ஒரு கேள்விதான்...குரங்கிலிருந்து மனிதன் வந்தால், குரங்கு எதிலிருந்து வந்தது??? அது எதிலிருந்து வந்தது???அது எதிலிருந்து வந்தது???....X...X...X...X...(முடிவிலி)கடைசியாக ஒரு செல் உயிரி அமீபா என்றாலும் அது எப்படி வந்தது..???

    * பிரபஞ்சம் வெடித்து சிதறி உருவாகியிருந்தால் உயிரினம் உருவாகுமா...???அப்படினா ஒரு சிவகாசி அணு குண்டை தீபாவளிக்கு வெடிக்க வைத்தால் அதிலிருந்து உயிருடன் வேண்டாம்,உயிரில்லாத ஒரு ரோபோவாவது வருமா ???

    * குரங்கு மனிதனானால், மொபைல் போன் லேப்டாப் ஆகுமா.... ??? உயிருள்ள செல்கள் வேண்டும் என்பீர்களா ??? அந்த செல்களுக்கு மட்டும் ஏன் உயிர் வந்தது...(காரணம் பிர்லா சிமெண்ட்டா !!!... ??

    * மரங்களுக்கும் உயிர் உண்டு ,குரங்குகளுக்கும் உயிர் உண்டு என்றால் மரம் ஏன் நடமாட வில்லை...ஒரே இடத்தில ஏன் உள்ளது..??

    * நில வாழ் உயிரிகள் அனைத்துக்குமே காற்று தேவை எனும் கட்டமிப்பிலேயே உள்ளது...காற்றை உரிய மூக்கில் யார் ஓட்டை போட்டு விட்டது..??எல்லாம் சரியாக இருந்து அந்த ஒரு செயல் மட்டும் இல்லையென்றால் உயிரினமே இருந்தும் இல்லாமல் போயிருக்கும்...அல்லது காற்று இல்லாமல் போயிருந்தால் உலகம் JPEG FORMAT டில் மட்டுமே இருந்திருக்கும் MP4 FORMAT டில் இருந்திருக்காது...காற்று எப்படி வந்தது..???மரம் தந்ததா?? அப்ப மரம் ???


    அடுத்தடுத்து பின்னால் கேட்கிறேன்...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்


    ReplyDelete
    Replies
    1. @ நாகூர் மீரான்

      ஆஹா....... சார்வாகன் நாக் அவுட்டு.......இனி எழுந்திரிக்க மாட்டார்னு நினைக்கிறேன்......... அப்படியும் சொல்ல முடியாது ஏதாவது புருடாவை எடுத்துகிட்டு வருவாரு!!

      Delete
    2. மிக அருமை மீரான் அவர்களே. எனக்கு உதவி செய்ய வந்ததற்கு நன்றி. இதெல்லாம் அவங்களுக்கு எங்க சார் புரியப் போகுது? பாருங்களேன். வீண் விவாதம் பண்ணத்தான் வரிஞ்சு கட்டுவாங்க. ஓ.கே. லீவ் இட்.

      Delete
  17. //ஆயிரக் கண்க்கில் ஆய்வுகள்,கட்ட்டுரைகள் என நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக வளர்கிறது.// இதில் எத்தனை உண்மை, எத்தனை போலி என்று யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா கேட்டீங்க போங்க! நச்...

      Delete
  18. தங்களது தளத்தையும் பார்த்தேன். அருமை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. ////மனித இனத்தோடு அதிகமாக் ஒத்து போகிற குரங்குகள் ஏன் புது புது டெக்னோலோஜியை மனிதன் போல இன்னும் கண்டுபிடிக்க வில்லை...???எப்போது கண்டுபிடிக்கும்..??? ////

    இப்படி கேள்வி கேட்கும் நாகூர் மீரான் என்பவன் ஒரு மனிதன் என்றே நினைக்கின்றேன். எதையாவது கண்டுபிடிச்சானா?

    சும்மா கூவ நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் கூவலாம்.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக தரம் இல்லாத கேள்விகளுக்கு நாம் பதிலளிப்பதில்லை...இருந்தாலும் நீங்கள் தலையை பிய்த்து கொள்ள உங்களுக்கும் ஒரு கேள்வி கேட்கிறேன்....

      கரு உருவாக்கத்தின் போது விந்தணு செல்கள் கருமுட்டையை நோக்கி நீந்தி செல்லும்...அப்போது அந்த செல்கள் நீந்துவதற்கு துடுப்பாக அச்செல்களுக்கு ஒரு வால் இருக்கும்...விந்தணு செல்கள் கருமுட்டையை அடைந்தவுடன் செல்கள் உள்ளே நுழையும் போது அந்த வால் துண்டிக்கப்பட்டு விடும்...வால் துண்டிக்கப்படாமல் மட்டும் இருந்தால் அந்த வாலானது கருமுட்டையை கலைத்துவிடும்...கரு உருவாகாது.. மனித சமூகமே இருக்காது...அடுத்த தலைமுறையே இல்லாமல் என்றோ அழிந்து போயிருக்கும்...அந்த துண்டிக்கப்படும் ஒரே ஒரு செயல் மட்டும் எப்படி நிகழ்கிறது..???

      வால் துண்டிக்கப்படும் செயல் முன்னரே நடக்குமாயின் விந்து செல் நீந்தாது அதனால் கரு உருவாகாது...துண்டிக்கப்படும் செயல் பின்னால் நடக்குமாயின் கருமுட்டை கலைந்து விடும்..

      செல்லானது வாலை கழட்டி விட சரியான இடம் கருமுட்டையை அடையும் இடமே...

      கத்திமேல் நடப்பது போல் உள்ள இந்த செயல் எப்படி சாத்தியம்...??? நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுவிட்டு பதில் கூறலாம்..

      நன்றி....

      Delete
    2. அற்புதமான பதில். குரங்கும் மனிதனும் ஒன்றா? மனிதப் படைப்பு அற்புதமானது என்ற நோக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலைப் பாருங்கள். பரிணாமவாதிகளின் தரம் எழுத்தில் வெளிப்படுகிறது. வெளிப்படையாக, நேர்மையாக கேள்விகள் இருந்தால் நாமும் அப்படியே பதில் சொல்லலாம். இப்படியெல்லாம் குதர்க்கமாகவும், அசிங்கமாவும் கேள்வி கேட்டால் என்ன சொல்வது?

      Delete
    3. நாம் கேட்ட கேள்விக்கு நாமே பதிலளித்து விட்டோம் கீழே பார்த்துக்கொள்ளவும்....

      நன்றியுடன்
      நாகூர் மீரான்

      Delete
  20. //// மரங்களுக்கும் உயிர் உண்டு ,குரங்குகளுக்கும் உயிர் உண்டு என்றால் மரம் ஏன் நடமாட வில்லை...ஒரே இடத்தில ஏன் உள்ளது..?? ////

    ஏனென்றால் இவற்றைப் படைத்த உங்கள் கடவுள் ஒரு முட்டாள். எதை எப்படி செய்யவேண்டும் என்று உங்கள் கடவுளுக்குத் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. ஏனெனில் இரண்டும் வேறு வேறு விதமான படைப்பு. ஒன்றிலிருந்து ஒன்று எப்படி வர முடியும்?

      Delete
  21. ////அறுதப்பழசான ஒரு கேள்விதான்...குரங்கிலிருந்து மனிதன் வந்தால், குரங்கு எதிலிருந்து வந்தது??? அது எதிலிருந்து வந்தது???அது எதிலிருந்து வந்தது???....X...X...X...X...(முடிவிலி)கடைசியாக ஒரு செல் உயிரி அமீபா என்றாலும் அது எப்படி வந்தது..???/////

    நானும் ஒரு பழைய கேள்வியையே கேட்கின்றேன்.

    இந்த உலகை உங்கள் ஏக இறைவன் படைத்தான்...படைத்தான்...
    என்று புடைத்துக்கொண்டு அலையும் உங்களிடமே கேட்கின்றேன்.

    எதிலிருந்து படைத்தான்....படைத்தான்...படைத்தான்?

    எக்கோ எபக்டுடன் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //எக்கோ எபக்டுடன் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.//

      சார் ....அது எகோ எபக்ட் இல்ல..எபக்ட் கொடுக்க வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை..ஒன்றிலிருந்து ஒன்று உருவானால் முதலாவது எதிலிருந்து உருவானது..அதற்கும் முதலாவது எதிலிருந்து உருவானது என்று தான் கேட்டேன்..கண்ணை துடச்சிட்டு படிங்க..

      //இந்த உலகை உங்கள் ஏக இறைவன் படைத்தான்...படைத்தான்...
      என்று புடைத்துக்கொண்டு அலையும் உங்களிடமே கேட்கின்றேன்.

      எதிலிருந்து படைத்தான்....படைத்தான்...படைத்தான்?//

      எடிசன் பல்ப்பை கண்டறிந்தார் என்றால் ...எப்படி பலப் எரிகிறது என்று நாம் கேட்கலாம்.. தவறில்லை..எடிசன் சொல்வார் டங்க்ஸ்டன் இழையால் எரிகிறது என்று... ஆனால் அது எப்படி டங்க்ஸ்டன் இழையில் எரியும் என்று கேட்க கூடாது..?? பல்ப் எரியப்போய் தானே சொல்வார் எடிசன்...மீண்டும் மீண்டும் டங்க்ஸ்டன் இழையால் எரியாது,அதெப்படி முடியும்,.. என்று தர்க்கம் செய்வீரானால்,உலகத்துக்கே தெரியும் யார் முட்டாள் என்று..

      நன்றி...

      Delete
  22. நாகூர் மீரான் என்ற அறிவாளிக்கு....

    உங்கள் தலைவர்....எங்கள் சுகவீன அண்ணாச்சியுடன் என்னோட பிளாக் பக்கம் வந்து எந்தக் கேள்வி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. யார் அறிவாளி என்பது அவரவர் எழுத்து நடையிலேயே தெரிகிறது.

      Delete
    2. வடிவேலு : என் ஏரியா பக்கம் வாயா..???நான் யாருன்னு அங்க காட்டுறேன்..

      சுந்தர்.சி : இதானே உன் ஏரியா ...நீ யாருன்னு காட்டு...

      வடிவேலு : இது மதியம் லஞ்ச் டைம்..தைரியம் இருந்தா என் தெரு பக்கம் வாயா...

      சுந்தர்.சி : இதானே உன் தெரு ...நீ யாருன்னு காட்டு...

      வடிவேலு : அங்க பாரு கொழந்தைங்க விளையாடுறாங்க..பயந்துருவாங்க..(எப்புடி எல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு )

      :-):-):-):-)!!!!!!!


      Delete
  23. துரை,

    //இந்த வௌவால் அற்புதமான ஒரு படைப்பு. பரிணாமக் கொள்கைக்காரர்களுக்கு சவால் விடும் ஒன்றாக இருந்து வருகிறது. //

    ரொம்ப டென்ஷனில் பதிவு போட்டு இருக்கிங்க ,போல பொங்கி இருக்கிங்க ,ஆனால் சரியா பொங்கவே இல்லை :-))

    வவ்வால் பரிணாம கொள்கைக்கு சவால் அல்ல சான்று, இறுவேறுபட்ட வகையான உயிரிணங்களுக்கு இடயே உள்ள இணைப்பு என சொல்வார்கள்.

    தவளை நிலத்திலும் நீரிலும் வாழ்தல்.

    திமிங்கிலம் நீரில் இருந்தாலும் குட்டிப்போட்டு ,பாலூட்டும் பாலூட்டி. அதனால் நீரீல் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்க முடியாது.

    பிளாடிபஸ் முட்டையிட்டு பாலூட்டும் பிராணி.

    இமாலயன் லிசார்ட் எனப்படும் பல்லி சிறிது தூரம் காற்றில் பறக்கும் வகையில் சிறிய இறக்கை போன்ற அமைப்பினைப்பெற்றுள்ளது. பல்லி என்பது ஊர்வன வகை ஆனால் அது பறக்கும்.

    ஊர்வனவும் ,பறவையும் முட்டையிடுதல் என்ற வகையில் பொத்உவான பண்பினை பெற்றுள்ளது.

    இது அனைத்து வகையான உயிரினங்களும் ஒரே மூலத்தில் இருந்து (அது ஒரு செல்) பல வகையாக பரிணாமம் அடைந்ததற்கு சான்று.

    --------------

    மேலும் இப்பதிவு வவ்வால் என்ற உயிரியின் தகவமைவைப்பற்றி மேலோட்டமாக சொல்லி இருக்கிறது ,தவிர பரிணாமத்தி சவாலுக்கு இழுக்கும் அளவுக்கு எதுவும் இல்லையே?
    --------------
    // மனிதனுக்கு இல்லாத எதிரொலியைக் கிரகித்து செயல்படும் சக்தி பெரும் அளவில் இந்தச் சிறு பிராணிக்கு கிடைத்திருப்பது தற்செயலாக உண்டான ஒரு காரியமா? அல்லது எல்லாம் வல்ல கடவுள் தமது சிருஷ்டிப்பில் செய்த அற்புதங்களில் இதுவும் ஒன்றா?//

    மனிதர்களும் பயிற்சி செய்தால் எதிரொலியை கிரகித்து செயல்படலாம் (எக்கோலோகேஷன்), என நிறுபித்துள்ளார்கள். உண்மையில் அப்படி செயல்படும் மனிதரான கிருஷ் என்பவரை அடிப்படையாக வைத்து சமீபத்தில் தாண்டவம் படம்ம் கூட வந்தது.

    உயிரினங்களின் தேவையே அவற்றின் தகவமைவை உருவாக்குகிறது.
    ---------

    உங்கள் கூற்றுப்படியே உயிரினங்களை கடவுள் தான் உருவாக்கினார் என்றால் ,எந்த கடவுள் உருவாக்கினார் என சொல்ல முடியுமா?

    அல்லா ,ஏசு, புத்தர்,மகாவீரர், பரமசிவன்,மகாவிஷ்ணு, பிரம்மா, ஸீயஸ்,அப்பொல்லோ, முனியாண்டி, கருப்பசாமி, இன்னும் பல்ல கடவுள்கள் இருக்கிறார்கள் யாருக்கு உயிரினங்களை உருவாக்கிய பெருமையை கொடுப்பீர்கள்.

    இதில் ஏசு ,புத்தர், மகாவீரர் எல்லாம் அவர்களை கடவுள் என்றே சொல்லிக்கொண்டதில்லை,ஆனால் பின்னாளில் கடவுளாக்கப்பட்டவர்கள்.

    ஒரு குழு ஏசு தான் என்பார்கள், இன்னொரு குழு அல்லா தான் என்பார்கள், இன்னொரு குழு பிரம்மா என்று சொல்லும், மேலும் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவின் கடவுளை இல்லை என சொல்லும், அப்படி அனைவர் சொன்னதையும் வைத்து பொதுவாக பார்த்தால் கடவுளே இல்லை என முடிவு தான் கிட்டும், அப்போ கடவுளே இல்லை என்ன்றால் உயிர்கள் பரிணாமம் மூலமே பலவாரூ உருவாகி இருக்க வேண்டும் என்ற அறிவியல் கொள்கை தானே சரியானது.

    முதலில் எந்த கடவுள் உண்மையானதுன்னு ஒரு முடிவுக்கு வாங்க,அப்புறம் பரிணாமத்தினை கேள்விக்கேட்கலாம் :-))
    ------------

    சகோ.சார்வாகன்,

    தங்கள் கருத்துக்கு நன்றி!
    -----------

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன அனைத்துமே ஒரே மூலத்திருந்து வந்தது என்பதை அறிவுள்ள எவனும் ஒத்துக்கொள்ள மாட்டான். புத்தி பேதலித்தவர்கள் வேண்டுமானால் ஒத்துக் கொள்வார்கள். ஒவ்வொன்றும் தனித்தனியாக விசேஷ குணங்களுடன், உள்ளுணர்வுகளுடன் கடவுளால் படைக்கப்பட்ட விசேஷ படைப்புகள். கொஞ்சம் மூளையைக் கசக்கி எழுதுங்க சார். சும்மா நீங்களே உங்களுக்கு சூனியம் வெச்சுக்காதீங்க.

      Delete
    2. கடவுளைப் பற்றி இந்த சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். முதல்ல பரிணாமத்தை புரோட்டா போட்டுட்டு அப்புறம்தான் மத்தது. ஓ.கே.வா?

      Delete
  24. இங்கே கருத்துரையிடுகிறவர்கள் அநாகரிகமான முறையிலோ ஏகவசனத்திலோ, அவமரியாதையாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. அவ்வாறு செய்யத் தலைப்பட்டால் கருத்துரைகள் உடனடியாக நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆரோக்கியமான விவாதத்திற்கு மட்டுமே இங்கே இடம் உண்டு.

    ReplyDelete
  25. //ஒரு குழு ஏசு தான் என்பார்கள், இன்னொரு குழு அல்லா தான் என்பார்கள், இன்னொரு குழு பிரம்மா என்று சொல்லும், மேலும் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவின் கடவுளை இல்லை என சொல்லும், அப்படி அனைவர் சொன்னதையும் வைத்து பொதுவாக பார்த்தால் கடவுளே இல்லை என முடிவு தான் கிட்டும்//

    வவ்வால் மதியம் எப்படி சாப்பிட்டார்?? என்று கேட்டால்

    வவ்வாலின் தாய் சொல்வார்கள் நான் தான் உணவு சமைத்தேன்..என்று..

    வவ்வாலின் துணைவியார் சொல்லலாம் நான் தான் கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வந்தேன் என்று..

    வவ்வாலின் தம்பி சொல்வார்..நான் தான் சிலிண்டர் பக்கத்துக்கு வீட்டில் வாங்கி வந்தேன்..அதனால் தான் உணவு சமைக்க முடிந்தது என்பார்..

    எதிர் வீட்டு விவசாயி சொல்வார் நான் தான் அரிசி விளைவித்தேன் என்று..

    பதிலுக்கு வவ்வால் சொல்கிறார் "போங்கப்பா...சாப்பாடு வானத்தில் இருந்து எனக்கு வந்தது" என்று..???

    இவர்கள் அனைவரும் சொல்வதும் உண்மைதான்....உங்களுக்கு தான் புரிந்து கொள்ள இயலவில்லை. சமைக்கப்பட்டுள்ளது உண்மை ,நீங்கள் சாப்பிட்டதும் உண்மை புரிந்து கொள்வதில் உங்களுக்கு பிரச்னை என்றால் வானத்தில் இருந்து வந்ததாக ஏன் பொய் சொல்கிறீர்கள்.??

    //முதலில் எந்த கடவுள் உண்மையானதுன்னு ஒரு முடிவுக்கு வாங்க,அப்புறம் பரிணாமத்தினை கேள்விக்கேட்கலாம் :-))//

    வவ்வாலின் விஷமத்தனம் இங்கு வெளிப்படுகிறது...நண்பர்கள் உஷார்....

    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வவ்வாலப் பத்தி தெரியாதா சகோ.மீரான்? விடுங்க. உங்க பதில் நச்...நச்...

      Delete
    2. துரை,

      அடடா ஒன்னு இருக்கு ,இன்னொன்னு காணோமே, எனது பின்னூட்டத்தினை தான் சொல்கிறேன்.

      மேலும் இதில் என்ன விஷமத்தினை கண்டீர்கள்.

      பரிணாமம் இல்லை என்கிறீர்கள், அப்படியானால் எந்த கடவுளின் படைப்பு உலகில் இருக்கு என தெரிந்தால் அதனை வணங்கலாமே எனக்கேட்டால் ,இப்படியா சொல்வது.

      முனிஸ்வரன் தான் அனைத்து உயிர்களையும் படைத்தார் என நினைத்தேன், ஆனால் அவரை நாகூர் மீரான் நம்பவில்லை ,அறிவாளியான நாகூர் மீரான் முனிஸ்வரனை நம்பினால் நானும் நம்புவேன் ,அவரே நம்பவில்லை என்பதால் நானும் நம்பவில்லை :-))
      ---------

      நகூர் மீரான்,

      //அது எப்படி டங்க்ஸ்டன் இழையில் எரியும் என்று கேட்க கூடாது..?? //

      கேட்கணும்,கேட்டால் பதில் கிடைக்கும்,அதான் அறிவியல்.

      மின்னோட்டத்திற்கு தடை உருவானால் வெப்பமாகி ஒளிறும்.

      டங்க்ஸ்டன் மின்னோட்டத்திற்கு அதிக தடை கொடுப்பதால் நன்கு ஒளிர்கிறது.

      மேலும் எடிசன் , மூங்கில் இழையை எரித்து ,கார்பன் பிளமெண்டாக பயன்ப்படுத்தி பல்ப் கண்டுப்பிடித்தார், அடிப்படை ஒன்றே.

      Delete
  26. நாம் கேட்ட கேள்வி :

    கரு உருவாக்கத்தின் போது விந்தணு செல்கள் கருமுட்டையை நோக்கி நீந்தி செல்லும்...அப்போது அந்த செல்கள் நீந்துவதற்கு துடுப்பாக அச்செல்களுக்கு ஒரு வால் இருக்கும்...விந்தணு செல்கள் கருமுட்டையை அடைந்தவுடன் செல்கள் உள்ளே நுழையும் போது அந்த வால் துண்டிக்கப்பட்டு விடும்...வால் துண்டிக்கப்படாமல் மட்டும் இருந்தால் அந்த வாலானது கருமுட்டையை கலைத்துவிடும்...கரு உருவாகாது.. மனித சமூகமே இருக்காது...அடுத்த தலைமுறையே இல்லாமல் என்றோ அழிந்து போயிருக்கும்...அந்த துண்டிக்கப்படும் ஒரே ஒரு செயல் மட்டும் எப்படி நிகழ்கிறது..???

    வால் துண்டிக்கப்படும் செயல் முன்னரே நடக்குமாயின் விந்து செல் நீந்தாது அதனால் கரு உருவாகாது...துண்டிக்கப்படும் செயல் பின்னால் நடக்குமாயின் கருமுட்டை கலைந்து விடும்..

    செல்லானது வாலை கழட்டி விட சரியான இடம் கருமுட்டையை அடையும் இடமே...

    கத்திமேல் நடப்பது போல் உள்ள இந்த செயல் எப்படி சாத்தியம்...???

    -------------------------------------------

    இதற்கான பதில் :-

    இந்த கேள்வி ராவணனிடம் கேட்டதால் அவரை வைத்தே பதில் கூறுவோம்...உதாரணத்திற்கு ராவணன் ஒரு சிறுவர்..வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார்...ராவணனின் தந்தையிடம் தான் டிவி ரிமோட் இருக்கிறது..தந்தை பக்கத்துக்கு ரூமில் இருக்கிறார்... ராவணன் தனியாக ஒரு ரூமில் இருந்து டிவி பார்க்கிறார்..நன்றாக சென்று கொண்டு இருந்த திரைப்படத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று வரப்போகிறது...அதை பார்த்தால் சிறுவரான ராவணன் மனது பாதிக்கப்படும்..ஆனால் தந்தை பக்கத்தில் இல்லை ..திரைப்படத்தில் அச்சம்பவம் வரப்போகிறது...என்ன நடக்கப்போகிறது...???

    அச்சம்பவம் திரைப்படத்தில் வரும் சமயம் தானாக டிவி சேனல் மாறிவிடுகிறது..எப்படி என்று ராவணனுக்கு புரியவில்லை...தந்தையை தேடுகிறார் ராவணன் ..தந்தை இருப்பது ராவணன் கண்ணுக்கு தெரியவில்லை..

    எப்படி செய்தார் தந்தை ???பக்கத்துக்கு அறையில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக ரிமோட் மூலம் சேனலை மாற்றி விட்டார்...

    இதைப்போலத்தான் கடவுள், வால் எனும் துடுப்பு இருந்தால் மனிதன் கரு உருவாகாது எனும் உண்மை தெரிவதால் அதை நேரம் வரும் போது நீக்கி விடுகிறார்...தான் இருப்பதை காட்டுவதற்கே கடவுள் இந்த செயலை தானே உருவாக்கி நிவர்த்தியும் செய்கிறார் ..

    இது படைப்புவாதிகளின் பதில்...பரிணாம வாதிகளின் பதில் என்ன..`?

    நன்றியுடன்
    நாகூர் மீரான்



    ReplyDelete
  27. சகோ.துரைடேனியல்

    தங்களது பதிவும் ,பதில் பின்னூட்டமும் அருமை..தொடருங்கள்...இறைவன் நாடினால் நாமும் தொடருவோம்...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.