Friday, November 7, 2014

வேட்டை நாய்கள்





வெறிநாய்கள் வெளியில் இல்லை
உள்ளேயே இருக்கிறது
வேட்டை நாய்கள் புறத்தில் இல்லை
அகத்திலேயே இருக்கிறது

கடித்து கடித்து குதறி
கடைசியில்
தோல் கிழிந்து
நிர்வாணமாய் நிற்கும் போதுதான்
நிதர்சனம் உரைக்கிறது
இந்த பாழும் மனதுக்கு

முற்றின பிறகு
ஞானம் வந்து எதற்கு
இன்றே
இளமை இருக்கும் போதே
விஷம் வைத்து
நாய்களைச் சாகடி
முதுமையில்
உலகம் உன்னை நிமிர்ந்து பார்க்கும்.


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. இனிய வணக்கம் நண்பரே...
    நீண்ட நாட்கள் உங்களைக் காணமுடியவில்லை.
    நானும் கடந்த ஒருவருடமாக எழுதுவது குறைந்துவிட்டது.
    நலம் தானே நண்பரே...
    ========================
    நன்றே செய்வோம் - அதுவும்
    இன்றே செய்வோம் என விளம்பும் பதிவு அருமை....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. மகேந்திரன் அவர்களே. நல்லாருக்கீங்களா? ஆமா சகோ. பார்த்து ரொம்ப நாளாச்சு. இனி கொஞ்சம் அப்பப்ப எழுதலாம்னு பார்க்குறேன். பார்க்கலாம். எல்லாம் இறைவனின் கையில். கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. ஆவ்!...ஆவ்! ரெம்பக் கடினம்....
    ஆம் புரிகிறது...அனுபவம்!..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. இலங்கா திலகம்.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.