உனக்கான என் பாதைகள்
அப்படியேதான் இருக்கின்றன
ஆனால்
நடந்து செல்ல பாதங்களைத்தான்
இன்னும் காணோம்
உனக்கான என் நந்தவனம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
கொஞ்சிப் பேசும்
குரல் மொழிகளைத்தான்
இன்னும் காணோம்
உனக்கான என் இதயம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதில் ஜீவனாய் இருந்த
உன் பிம்பங்களைத்தான்
இன்னும் காணோம்
கனவுகளெல்லாம்
நிஜங்களாகக் கூடாதாவென
நினைத்த காலங்கள் போய்
நிஜங்களெல்லாமே கனவுகளாய்ப் போன
ஒரு இலையுதிர்க் காலத்தின்
இறுதி நாட்களுக்குள்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நானும் உன் நினைவுகளும்.
Tweet | |||||
அருமை.
ReplyDeleteவெகு நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றிங்க. தொடர்ந்து வாங்க.
ReplyDeleteஇலையுதிர்காலத் தேடல் அழகானது நினைவுகளைப் போல நிஜமும் ஒரு நாள் உங்களை தேடி வரும்.
நாளை வலைச்சரத்தில் [ http://blogintamil.blogspot.in]உங்கள் வலைத்தளத்தை அறிமுகபப்டுத்துகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
மனோ சாமிநாதன்
www.muthusidharal.blogspot.com
Valuable Inforamtion I Like it and Visit Who has interested Make Money Online from Home
ReplyDelete