Sunday, December 1, 2013

முகமூடிகள் அழுக்கானவை



போட்டுக்கொள்ள
ஏராளம் முகமூடிகள் இருந்தாலும்
முகமூடிகள் தேவையில்லை

முகமுடையவனாகவே இரு
முகமூடிகள்
வலிக்கும்
உடைக்கும்
பிளக்கும்

உன் பூக்களை கொய்து
பந்தங்களை பற்ற வைக்கும்
சொக்கப்பனையாய் சுட்டெரிக்கும்
வேரறுந்து விழவைக்கும்

முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
பரவாயில்லை
முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்

வேண்டாம்
முகமுடையவனாகவே இரு
முகமூடிகள் அழுக்கானவை


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

8 comments:


  1. முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
    பரவாயில்லை
    முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்

    வேண்டாம்
    முகமுடையவனாகவே இரு
    முகமூடிகள் அழுக்கானவை//

    ஆழமான பொருளுடைய
    அற்புதமான கவிதை
    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    பலதடவை வந்து போனேன்
    இனியேனும் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பிற்கு நன்றி சார். தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. /// முகமூடிகளுக்காக முகங்கள் என்றால்... ///

    தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்லாருக்கீங்களா தனபாலன் சார்? தங்களது அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். சில இடர்ப்பாடுகள் உண்டு. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். பல நண்பர்களை மிஸ் பண்ணியிருக்கிறேன்.

      Delete
  3. ” உங்களுக்கு என்ன ஆச்சு? “ என்று நானே மின்னஞ்சல் அனுப்பலாம் என்று இருந்தேன். மீண்டும் வந்ததற்கு நன்றி!

    // முகங்களுக்காக முகமூடிகள் என்றால்
    பரவாயில்லை
    முகமூடிகளுக்காக முகங்கள் என்றால் //

    சிந்தனை வரிகள்! வலைப்பதிவு உலகில் மட்டுமல்லாது வெளி உலகிலும் இந்த முகங்களைக் காண முடிகிறது.

    ReplyDelete
  4. தங்களது அன்பிற்கு மிக்க நன்றி சார். இத்தனை நல்ல உள்ளங்கள் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

    ReplyDelete
  5. குயில் ஒசையை நீண்டடடடடடடடடடடடடடடடடடட் காலத்திற்கு அப்புறம் இன்றுதான் கேட்கிறேன். இனிமையாக இருக்கிறது. துரைடேனியல் இணைய உலகில் மீண்டும் சிறகடிக்க வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்,

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.