Thursday, March 8, 2012

சமையலறைக் குருவியே...!



என் இனிய தோழி
இன்று
மகளிர் தினமாம்

போதும்
இந்த
யுக உறக்கம்
இன்றாவது
கண்விழி...!

உன்னைச் சுற்றியுள்ள
ஆண்களுக்காக
நீயாய் உருவாக்கிக்கொண்ட
அந்த
உலகத்தை விட்டு
இன்றாவது
வெளியே வா!

உனக்காக
இங்கு
ஓர் புதிய உலகம்
காத்திருக்கிறது

இடம் கொடுக்கவேண்டும்தான்
ஆனால்
இடத்தையே கொடுத்துவிடக் கூடாது

சமையலறையிலேயே கூடுகட்டி
குடியிருப்பவளே!

வானம் தாண்டி
வியாபித்திருக்கும்
பிரபஞ்சம் அழைக்கிறது

வா! விரைந்தோடி வா!

வந்தெழுது
வானக் கவிதைகள்

உன் தூரிகைகள்
மானுட ஓவியங்கள்
வரையட்டும்

நீ
நிமிரு
திசைகள்
குனியும்...!




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

27 comments:

  1. சர்வதேச மகளிர் தினம் அன்று நல்லதோர் கருத்துள்ள கவிதை.... பாராட்டுகள் நண்பரே....

    ReplyDelete
  2. எழுச்சி ஊட்டும் அழகான கவிதை.

    ReplyDelete
  3. இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
  4. நீ
    நிமிரு
    திசைகள்
    குனியும்...!

    அழகாய் முடித்தீர்கள்.வாசித்தேன்.வாக்கிட்டேன்

    ReplyDelete
  5. நல்ல கற்பனைக் கவிதை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை பாஸ்

    ReplyDelete
  7. அசத்தலான மகளிர் தினக் கவிதை நண்பரே....
    ஒவ்வொரு வார்த்தையினும் அக்கினிப் பிழம்புகள்...

    ReplyDelete
  8. @ ஹாஜாமைதீன்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  10. @ ஸ்ரவாணி

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. பார்த்து ரொம்ப நாளாச்சே உங்களை.

    ReplyDelete
  11. @ அருள்

    - வருகைக்கு நன்றி. தங்கள் இணைப்பை பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. @ மதுமதி

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார். ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா. ஓ.கே.

    ReplyDelete
  13. @ ரத்னவேல் நடராஜன்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  14. @ Dhanasekaran

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. @ K.s.s. Rajh

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  16. @ மகேந்திரன்

    - வாங்க மகேந்திரன் சார். வணக்கம். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  17. முடிவு மிகவும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. நல்ல மகளிர் தினக்கவிதை நண்பரே...வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நீ
    நிமிரு
    திசைகள்
    குனியும்...

    அருமையானக் கவிதை!

    ReplyDelete
  20. //நீ
    நிமிரு
    திசைகள்
    குனியும்...!//
    நிச்சயமாக!
    அருமை

    ReplyDelete
  21. பெண்களை மதிக்கிறீர்கள் என்பது சந்தோஷமே.பெண்கள் முன்னேற்றம் உங்களின் இதே அன்பிலும் வழிநடத்தலிலும்தான் !

    ReplyDelete
  22. பெண்கள் அடிமைப்பட்டு கிடப்பதே பெண்களிடம் தான் என்பது என் கருத்து

    ReplyDelete
  23. வணக்கம்!

    // உன்னைச் சுற்றியுள்ள ஆண்களுக்காக நீயாய் உருவாக்கிக் கொண்ட அந்த உலகத்தை விட்டு இன்றாவது வெளியே வா! //

    மகளிரின் விடுதலை ஆண்களுக்காக எங்கே நிற்கிறது என்பதனைச் சுட்டிக் காட்டும் வரிகள்.

    ReplyDelete
  24. வந்தெழுது
    வானக் கவிதைகள்.
    அழகு அருமை .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.