Friday, January 13, 2012

பணக்காரனாக நூறு வழிகள்

அந்த ஊரிலேயே பணக்காரர் அவர். நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்தார்.

ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பூங்கா ஒன்றில் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது கந்தல் ஆடை அணிந்த பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வந்தான்.

அந்த பிச்சைக்காரன் அந்த செல்வந்தரைப் பார்த்து “ ஐயா! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என் தோற்றத்தைப் பார்த்து என்னை பிச்சைக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன். புத்தகம் ஒன்று எழுதி உள்ளேன் “ என்றான்.

அந்த செல்வந்தர் வியப்புடன் “ அப்படியா! என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார். “ பணக்காரனாக நூறு வழிகள் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளேன் “ என்றான்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ எழுத்தாளன் என்கிறாய். பணக்காரனாக நூறு வழிகள் என்று புத்தகம் எழுதியிருக்கிறேன் என்கிறாய். நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையே. பிச்சை எடுத்து அல்லவா வாழ்க்கை நடத்துகிறாய் “ என்று கேட்டார்.

“ பணக்காரனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழிதான் அய்யா. இதையும் அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் “ என்று பதிலளித்தான் அவன்.

அந்த பணக்காரர் வயிறு குலுங்க சிரித்துவிட்டு புத்தகத்தை வெளியிட அவனுக்கு தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.









.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

20 comments:

  1. மீண்டும் ஒரு கதையுடம் கருத்து ........ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாயுள்ள பிள்ளை எப்படியும் பிழைத்துக் கொள்ளும்
    என்பது சரிதான் போலிருக்கு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    த.ம 2

    ReplyDelete
  3. @ இடிமுழக்கம்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. @ ரமணி

    தங்கள் வருகைக்கும் அருமையான விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார். தொடரும் தங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கம் எனது இதயபூர்வமான பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  5. சூப்பர்.வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  6. சூப்பர்...



    உழைத்தால் கண்டிப்பாக ஒரு நாள் உயரலாம்...

    1000 வழிகளில் உழைப்பை நம்புகிறவர்களே உண்மையான பணக்காரர்கள்...

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அவர் பிச்சை எடுக்காமல் அவர் எழுதிய புத்தகத்தை தானே விற்க வந்தார்! பிழைத்துக் கொள்வார்! நன்றி Sir! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
    "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    ReplyDelete
  9. கருத்துள்ள நல்ல கதைக்கு நன்றிகள் பல நண்பரே.


    பொங்குகின்ற பொங்கலைப் போல
    மகிழ்ச்சி என்றும் நிலைத்து பொங்கட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
    அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. சிரிச்சாலும் சிந்திக்கவும் வைக்கிறது குட்டிக்கதை !

    ReplyDelete
  11. தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    நானும் ஒர் பத்தகம் வெளியிட உள்ளேன்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தலைப்பை பார்த்து பணக்காரனாகலாம்ன்னு ஆசை ஆசையா வந்தேனே இப்படி ஏமாத்திபுட்டீங்களே சகோ.

    ReplyDelete
  13. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. வெற்றியாளனாக வேண்டலாம் வரலாமே தவிர பணக்காரன் ஆகா முடியாது!! (பிச்சை மூலம் )

    ReplyDelete
  15. வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் உண்மைதான்..த.ம.13..
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..

    தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?

    ReplyDelete
  16. சிந்திக்கவைக்கும் சுவையான கதை. பாராட்டுகள்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.