Sunday, January 8, 2012

நரம்பு தின்னும் நாய்கள்






என் எலும்புகளை
தின்று முடித்த
நாய்களுக்கு
இன்னும்
பசியடங்கவில்லை
என் நரம்புகளையும்
தின்னத் தொடங்கிவிட்டன.

*******

புகார் கொடுக்க
நேரமிலலை
புகார் வாங்கவும்
ஆளுமில்லை
காரணம்
புகார்களே
இங்கு
உணவாகிவிடுகின்றன.

*******

ஆகவே
இன்று முதல்...
இந்த சீதைகள்
மாதவிகளாகிறார்கள்!







டிஸ்கி: விலைமாதுவும் அவள் மகள்களும்













.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

19 comments:

  1. நல்ல கவிதை நண்பரே... அவர்களின் வலியும், உணர்வும் உங்கள் கவிதையில் தெரிகிறது....

    ReplyDelete
  2. சுருங்கத்தான் சொல்லியுள்ளீர்கள்
    ஆயினும் அதிகம் யோசிக்கவைத்துப் போகிறது
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 1

    ReplyDelete
  3. வலிகளை சுமந்து வந்திருக்கின்றாது உங்கள் கவிதை

    ReplyDelete
  4. மாதவியும் கற்பில் குறைந்தாளில்லையாம். அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் மாதவிகளாகவே வாழட்டும். அவர்கள் வயிற்றில் மணிமேகலைகள் பிறப்பார்கள்.

    கவிதை சொல்வதை விடவும் சொல்லாமல் சொல்வது அதிகம். எனவே பல பரிமாணங்களில் விரியும் வாசகரின் பார்வையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முனையும் டிஸ்கி தேவையில்லை என்பது என் கருத்து. தவறாக இருப்பின் பொறுத்தருளவும்.

    ReplyDelete
  5. கவிதை நல்லாருக்கு, டிஸ்கியையே டைட்டில் ஆக்கி இருக்கலாம்

    ReplyDelete
  6. @ Ramani

    Varugaikkum pakirvukkum arumaiyana pinnuttathirkum Nanri Sir!

    ReplyDelete
  7. @ Rathnavel

    Varugaikkum thodarum aatharavukkum mikka Nanri Sir!

    ReplyDelete
  8. @ Geetha

    Neenga solvathu sarithaan Sago. TISCII thevai illaithaan. Arumaiyana karuthuraikku mikka Nanri.

    ReplyDelete
  9. அருமையான கவிதை சார்.....

    ReplyDelete
  10. கீதாவின் முழுப் பின்னூட்டத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் டேனியல்.வாசிப்பவரின் பல கண்ணோட்டங்கள் கொண்டதே கவிதையாம்!

    ReplyDelete
  11. ஹேமா said //கீதாவின் முழுப் பின்னூட்டத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் டேனியல்.வாசிப்பவரின் பல கண்ணோட்டங்கள் கொண்டதே கவிதையாம்!//

    நன்றி சகோ. ஹேமா! ஒத்துக்கொள்கிறேன். பாமர வாசகருக்காக அப்படிச் செய்தேன். இனி இப்படி தவறு வராமல் பார்த்துக்கொள்கிறேன். அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.