Sunday, July 8, 2012

கட்டாய உபவாசம்

அரிப்பெடுத்த என் மூளையை
மூன்றாம் கையால் சொறிந்தபோது
இரத்தம் பீறிட கதறியது

பிதுக்கத் தெரிந்த உனக்கு
போஷிக்கத் தெரியாதா

மூளையின் கேள்விக்கு
புன்னகைத்தேன்

காவலுக்கு வைத்தால்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாய்
ஏவலுக்கு வைத்தால்
ஏமாற்றுகிறாய்

திமிரடங்கத்தான்
இந்த கட்டாய உபவாசம்

என் போதனைக் கையை
புறம்பே தள்ளி
விசுக்கென கதவடைத்துக்கொண்டது

இந்த...
வீணாய்ப்போன மூளை.







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. மீண்டும் உங்கள் பக்கத்தில் கவிதை.... நல்வரவு!

    ReplyDelete
  2. வயிற்றின் அஜீரணத் திமிரடங்க உபவாசம். மனத்தின் அஜீரணத் திமிருக்கும் அதுவே பரிகாரம். அழகான சொல்லாளுமையுடன் ரசனையான கவிதை. நல்வரவு மற்றும் பாராட்டுகள் துரை டேனியல்.

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் துரைக்கு நல்வரவு. நல்ல கவிதை. தொடரட்டும். (உங்கள் ஓட்டுப் பட்டைகளில் உலவு தூக்கி விடுங்கள் துரை. தளம் திறக்க வெகுநேரமாகிறது).

    ReplyDelete
  4. காவலுக்கு வைத்தால்
    காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாய்
    ஏவலுக்கு வைத்தால்
    ஏமாற்றுகிறாய் ...
    தங்கள் வரிகளைக் காணாமல் நாங்கள் அல்லவா ஏமார்ந்திருக்கிறோம் தொடருங்கள் பயணமதை.

    ReplyDelete
  5. @ வெங்கட் நாகராஜ்

    - வாங்க வெங்கட் சார். நல்வரவு. தங்கள் வாழ்த்துக்கும் வரவேற்பிக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. @ கீதமஞ்சரி

    - வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோ.

    ReplyDelete
  7. @ நண்டு @ நொரண்டு

    - தங்களின் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  8. @ பாலகணேஷ்

    - கணேஷ் சார். பாலகணேஷ்னு பேரு மாத்திட்டீங்களா? ஓ.கே. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சார். தங்களின் ஆலோசனைப்படி உலவு பட்டையை தூக்கி விட்டேன். அற்புதமான பலனளிக்கும் யோசனைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  9. @ சசிகலா

    - தங்களின் வருகைக்கும் அழகான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  10. @ திண்டுக்கல் தனபாலன்

    - வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி. தங்களது யோசனைப்படியே உலவுப் பட்டையைத் தூக்கி விட்டேன். அற்புதமான யோசனைக்கு நன்றி. இதே யோசனையை சகோ. கணேஷ் அவர்களும் சொல்லியிருந்தார். இருவருக்குமே மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  11. கவிதை நன்று. வயிற்றுக்கு பட்டினி போட்டால் மூளைக்கும் பட்டினி போட்ட மாதிரிதான்.
    த.ம. 6

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.