மூன்றாம் கையால் சொறிந்தபோது
இரத்தம் பீறிட கதறியது
பிதுக்கத் தெரிந்த உனக்கு
போஷிக்கத் தெரியாதா
மூளையின் கேள்விக்கு
புன்னகைத்தேன்
காவலுக்கு வைத்தால்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாய்
ஏவலுக்கு வைத்தால்
ஏமாற்றுகிறாய்
திமிரடங்கத்தான்
இந்த கட்டாய உபவாசம்
என் போதனைக் கையை
புறம்பே தள்ளி
விசுக்கென கதவடைத்துக்கொண்டது
இந்த...
வீணாய்ப்போன மூளை.
.
Tweet | |||||