Wednesday, November 9, 2011

மண்டையோட்டு வியாபாரம் - திடுக்கிடும் செய்தி

இன்றைய நாளிதழில் நான் படித்த திடுக்கிடும் செய்தி ஒன்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கங்கை நதியின் கரையோரங்களில் வழக்கமாய் நடைபெறும் ஒரு காரியம் என்னவென்றால் நதிக்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் பிணங்களை சடங்குகளெல்லாம் செய்து முடித்தபின் மலர்மாலை அலங்காரங்களோடு ஒரு கட்டையில் வைத்துக் கட்டி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். அடக்கம் செய்ய மாட்டார்கள். இது அவர்களின் பழக்கமாகும்.

அந்த நதிக்கரையோர கிராமம் ஒன்றில் வசிப்பவன் பெயர் ராம்சிங். இவனுடைய வேலை என்ன தெரியுமா? ஆற்றில் மிதந்து வருகிற பிணங்களை எடுத்து அவற்றின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துவிட்டு உடல்களை ஆற்றில் வீசி எறிந்து விடுவானாம். தலையை பல நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்து விடுவானாம். தலை அழுகி சதைகள் கழிந்த பிறகு மண்டையோடாய் மாறி இருக்கும். அதைத் தோண்டி எடுத்து ரூ.3000 முதல் ரூ.5000 வரை விலை வைத்து விற்று விடுவானாம். மண்டையோட்டை வைத்து மந்திரவாதம் செய்பவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் இவ்விதமாக நல்ல லாபத்திற்கு விற்று விடுவானாம். இவ்விதமாய் இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட மண்டையோடுகளை விற்பனை செய்து இருக்கிறானாம். சிறப்பு காவல்துறை புலனாய்வுக் குழுவினர் இரகசியமாக, நுணுக்கமாக கண்காணித்து இவனை கையும் களவுமாக பிடித்து இருக்கிறார்களாம்.

இன்னும் இதுபோல் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இந்த மண்டையோட்டு வியாபாராம் வடநாட்டில் மிகவும் பரபரப்பாய் பேசப்படுகிறதாம்.




நன்றி: தினத்தந்தி

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

14 comments:

  1. இதெல்லாம் கூடவா பிஸினெஸ்? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  2. வடநாட்டில் மட்டுமல்ல சென்னையில் கூட விற்கிறார்கள்... என்ஜினியரிங் மாணவ மாணவிகள் Drafter வாங்கி வச்சிருக்குற மாதிரி மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் இப்படி எலும்புக்கூடுகளை வாங்கி வைப்பதுண்டு...

    ReplyDelete
  3. மண்டையோட்டுக்கும் ஆபத்தா..

    ReplyDelete
  4. குப்பையே காசாகும்போது மண்டையோடு காசாகாதா?
    உயிரோடு இருப்பவர்களை கொனறு மண்டயை எடுக்காதாவரை பயமில்லை.

    ReplyDelete
  5. நல்லாதான் பண்றாங்க வியாபாரத்தை .

    த.ம 3

    ReplyDelete
  6. வெளங்கிடும்....,

    ReplyDelete
  7. //இதெல்லாம் கூடவா பிஸினெஸ்? அவ்வ்வ்வ் //

    நன்றி சகோ.சி.பி.செந்தில்குமார். தங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  8. //வடநாட்டில் மட்டுமல்ல சென்னையில் கூட விற்கிறார்கள்... என்ஜினியரிங் மாணவ மாணவிகள் Drafter வாங்கி வச்சிருக்குற மாதிரி மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் இப்படி எலும்புக்கூடுகளை வாங்கி வைப்பதுண்டு... //

    அப்படியா தலைவா. நன்றி சகோ. Philosophy Prabhakaran.

    ReplyDelete
  9. //மண்டையோட்டுக்கும் ஆபத்தா..//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. தேனம்மை லக்ஷ்மணன்.

    ReplyDelete
  10. // குப்பையே காசாகும்போது மண்டையோடு காசாகாதா?
    உயிரோடு இருப்பவர்களை கொனறு மண்டயை எடுக்காதாவரை பயமில்லை. //

    நன்றி சகோ. வலிபோக்கன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. // நல்லாதான் பண்றாங்க வியாபாரத்தை //

    நன்றி சகோ. M.R.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. // வெளங்கிடும்...//

    நன்றி சகோ. ராஜி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. படிக்கும்போதே திடுக்!
    என்னவெல்லாம் பிசினஸ் ஆகிவிடுகிறது..

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.