Saturday, March 3, 2012

கடுமையான கோடைவெப்பத்தைத் (Heat Stroke) தடுக்க ஓர் சுலபமான வழி !




இதோ. கோடைக் காலம் துவங்கப்போகிறது. இந்த கோடைவெப்பத்தை தடுப்பது எப்படி? பார்ப்போம். கோடைக் காலங்களில் நாம் சாதாரணமாக பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் சாலைகளில் நடந்துகொண்டிருப்பவர்கள் திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார்கள். நல்ல உடல் திடகாத்திரமாக இருப்பவர்களுக்கே இவ்வித மயக்கம் வருவதைப் போன்ற நிலை உண்டாகலாம். உடல் களைப்பாகவும் உணரலாம். இந்த வெப்பத்தாக்குதலிருந்து (Heat Stroke) தப்பிப்பது எப்படி?

மருத்துவர்கள் என்ன அறிவுரை சொல்கிறார்கள்? நிறைய தண்ணீர் குடியுங்கள். உப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று. அதாவது உப்பும் தண்ணீரும் சேர்ந்த கலவை. அது நம்முடைய உடல் நீரிழப்பு (De-Hydration) ஆவதைத் தடுக்கும். அது சரியா அல்லது தவறா?

நியாயப்படி அது சரிதான். மருத்துவர்களும் மருத்துவத்துறையினரும் சொல்வது போல் அது உண்மையென்றே சொல்கிறார்கள். ஒத்துக்கொண்டாலும் அதில் சில சந்தேகங்களும் உண்டு. என்னவென்றால் அதில் உள்ள உப்பைக் குறித்துப் பார்ப்போம். நம்முடைய வியர்வையும் உப்பாகவே இருக்கிறது. அதாவது வெப்பத்தால் அதிகமாக வியர்க்கிறது. அதனால் நீரிழப்பு (உப்பு இழப்பு) ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட இந்த உப்புக் கரைசல் என்றால் அது தவறாகிறது. உப்பானது நம்முடைய இரத்தத்தில் உள்ள நீரை மேலும் குறைக்கவே செய்கிறது. பிறகு எப்படி இது ஈடுகட்டுகிறது என்று தெரியவில்லை.




நிறைய பேர் உப்பை அதிகமாத் தின்பதால்தான் உயர்இரத்த அழுத்தம் (Hupertension) வந்து இறந்துவிடுகிறார்கள் என்பது மருத்துவ உலகம் அறிந்த உண்மையாகும். ஏற்கனவே நாம் போதுமான அளவு உப்பை நமது உணவில் சேர்த்துத்தான் வருகிறோம். இந்த நிலையில் மேலும் மேலும் உப்பைச் சேர்த்தால் வெப்பத்தாக்குதல் (Heat Stroke) நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது? என்பது ஒரு மாற்று சிந்தனையாகவே இருக்கிறது.

அப்படியானால் இந்த வெப்பத்தாக்குதலிலிருந்து எப்படி தப்பிப்பது? வேறு ஏதேனும் வழி உண்டா? இருக்கிறது. விடை பால்தான். ஆம் மிகச்சிறந்த வழி பால்குடிப்பதுதான்.




பாலானது போதுமான அளவில் புரோட்டினையும் வெப்பத்தாக்குதலிலிருந்து உடலையும் காக்கிற திறனைப் பெற்றிருக்கிறது.

பாலில் உள்ள அல்புமின் (Albumin) என்ற வேதிப்பொருள் நம்முடைய இரத்தத்தில் உள்ள தண்ணீரை சமநிலைப்படுத்தும் பணியை அருமையாகச் செய்கிறது. மேலும் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்தால் பலன் இரட்டிப்பாகிறது.

இனி கோடைக் காலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு டம்ளர் நிறைய பால் அருந்திவிட்டு வெளியே செல்லுங்கள். கோடை வெப்பத்தைத் தணியுங்கள். மலிவான சிறந்த வழி இது ஒன்றே!

வாழ்க நலமுடன் !







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

11 comments:

  1. நல்ல பகிர்வு... உபயோகமுள்ள தகவல்கள்... நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. மிகக் குளிர்மையாக உள்ளது இடுகை பயன் நிறைத்து. பாராட்டுகள். தொடரட்டும் பணி. வாழ்த்துகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வெக்கை காலத்துக்கு முன்னேற்பாடா..நல்லது !

    ReplyDelete
  5. @ வெங்கட் நாகராஜ்

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  6. @ Kovaikkavi

    - தங்கள் வருகைக்கும அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  7. @ Koodal Bala

    - தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  8. @ ஹேமா

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ திண்டுக்கல் தனபாலன்

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.