Thursday, March 1, 2012

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?




இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான்.

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!

வாழ்க நலமுடன் !





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

18 comments:

  1. அடேங்கப்ப....வாழை இலையில் இவ்வளவு நன்மையா? பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. கலாச்சார மாற்றத்தால் நாம் நிறைய நன்மைகளை மறந்து வருகிறோம்...

    நல்லதொரு தகவல்...

    ReplyDelete
  3. வாழையிலையில் சாப்பிடுவது ஒரு தனி சுவை நண்பரே..

    ReplyDelete
  4. வாழையிலையில் சுடச் சுட உணவு கட்டியெடுத்துப் பாடசாலை கொண்டு போன ஞாபகம் வருது.அந்த வாசனையே ஒரு அலாதிதான் !

    ReplyDelete
  5. வாழை இலை மகிமையை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. வாழை இலையை விட மலிவு என்று பேப்பரில் வாழை இல்லை போல் பிரிண்ட் செய்தவற்றை வாங்கி அதில் பரிமாறும் பயித்தியங்களை என்ன செய்யலாம்?

    ReplyDelete
  7. வாழை இலை நல்லதுதான். ஆனால் வாழை இலையில் சாபிடுபவர்களுக்கு எந்த நோயும் வருவதில்லை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதேனு உண்டா? நமது கட்டுரைக்கு வலு சேர்க்க வேண்டெமென்பதற்காக ஆராய்ச்சி செய்யாத விஷ்யங்களையெல்லாம் அடித்து ஆடுகின்றோம்!!! - சிமுலேஷன்

    //நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? //

    ReplyDelete
  8. வாழை இலையில் இத்தனை விசயங்களா??

    ReplyDelete
  9. விரிந்துகிடக்கிற வாழை இலை பலவிஷயங்களை சொல்லி விட்டுப்போகிறது.வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  10. ஒன்றுக்கும் உதவாத அழகுச் செடிகளை உரம் போட்டு வளர்க்கும் நகரவாசிகளுக்கு வாழை மரத்தின் அருமை எங்கே தெரியப் போகிறது?
    பதிவு அருமை! நன்றி!

    ReplyDelete
  11. ஒன்றுக்கும் உதவாத அழகுச் செடிகளை உரம் போட்டு வளர்க்கும் நகரவாசிகளுக்கு வாழை மரத்தின் அருமை எங்கே தெரியப் போகிறது?
    பதிவு அருமை! நன்றி!

    ReplyDelete
  12. ஆரோக்கிய குறிப்பு அருமை

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அறியாத அரிய தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.