Friday, December 30, 2011

என் பறை முழங்குகிறது




என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

******

ஓ பாவிகளே
மனந்திரும்புங்கள்!

நீங்கள் கனவான்கள்
என்றுதான் அழைக்கப்படுகிறீர்கள்

ஆனால்…..
கனவீனங்களை மொத்தமாய்க்
குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்கள்

*******


உங்கள் இதய வீட்டை
உற்றுப் பாருங்கள்

பொறாமைத் தூசியால்
நிறைந்திருக்கிறது
ஓர் அறை

ஆபாசக் குப்பைகள்
குவிந்து கிடக்கிறது
மற்றோர் அறை

******



சுவரெங்கும்
சிந்திக் கிடக்கிறது
வட்டிக்கு வாங்கினவர்களின் இரத்தம்

உங்கள் பீரோக்களுக்குள்
அடைந்து கிடக்கிறது
ஆயிரமாயிரம் ஆத்மாக்களின்
பிராணன்கள்

பாத்திரங்களாகிப் போன
பத்திரங்களுக்குள்ளே
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உடைந்து கிடக்கிறது
உயிர்த்துளிகள்

******

உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
மறைந்து கிடக்கின்றன
ஏழைகளின் ஆடைகள்


உங்களுக்கு பசியாற்ற வந்தனர்
தாய்மார்கள்
பட்டினிக் கிடக்கின்றன
அவர்களின்
பச்சிளங்குழந்தைகள்


பாவாடை நாடாக்களில்
ஊஞ்சல் கட்டியாடுவதை
பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
குழந்தைகளின் கதறல்
கேட்கவா போகிறது?

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….




******

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

ஓ பாவிகளே!
மனம் திரும்புங்கள்

உங்கள் மூட்டைப்பூச்சி வேலைகளை
நிறுத்தும் காலம்
இதோ வந்துவிட்டது!


அழுகிப்போன உங்கள்
இதயங்களை
அறுவைச் சிகிச்சை
செய்யும் காலம்
இதோ வந்துவிட்டது!

புது வருடம் பிறக்கிறது
புது யுகமும் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா …

******



இனியாவது
உங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துங்கள்

அழுக்கு வருடங்களை
அகற்றிப் போடுங்கள்

முகமூடிகளை அகற்றிவிட்டு
முகங்களை
அணிந்துகொள்ளுங்கள்

கண்ணாடி உருவங்களை
கல்லெறிந்து உடைத்துவிட்டு
முகமுகமாய்
தரிசனமாகுங்கள்

காலப்புத்தகத்தில்
உங்கள்
தண்ணீர் எழுத்துக்களை
அழித்துவிட்டு
கல்லெழுத்துக்களை
பொறியுங்கள்

ஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்

புது வருடம் பிறக்கிறது
புதுயுகம் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….


டிஸ்கி:


நான் பதிவெழுத வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வந்தது எனக்கு பெருமகிழ்சியைத் தந்தது. மேலும் பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. அவற்றை எனது 100-வது பதிவில் தெரிவிக்கிறேன்.

இதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வருகைதந்து, வாக்குகள் இட்டு, பின்னூட்டமிட்டு, ஆதரவு தந்த பதிவர்கள் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !.







.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

24 comments:

  1. கண்ணாடி உருவங்களை
    கல்லெறிந்து உடைத்துவிட்டு
    முகமுகமாய்
    தரிசனமாகுங்கள்...

    அருமை..
    புத்தாண்டு வாழ்த்துகள்..

    த.ம-1

    ReplyDelete
  2. ///பாவாடை நாடாக்களில்
    ஊஞ்சல் கட்டியாடுவதை
    பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
    குழந்தைகளின் கதறல்
    கேட்கவா போகிறது? ////

    என்ன ஒரு அமைதிச் சாடல்..
    வார்த்தைகளின் தீவிரம் குறைவாக இருந்தாலும்
    அதன் வீச்சு குத்திக் கிழிக்கும் விதமாக..
    இது எனக்கு பிடித்த வரிகள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம் 2

    ReplyDelete
  3. முரசடித்துச் சொல்லும் விசயங்கள் அனைத்தும்
    அருமையானவை
    அனைவருக்குமானவை பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  4. உங்களின் பறை முழங்கிய வரிகள் அனைத்தும் நிதர்சனம். அருமை. மனதில் பல உணர்வுகளை எழுப்பின துரை. நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தட்டி எழுப்புங்கள், விடியட்டும் இந்த புது வருடத்திலாவது

    ReplyDelete
  6. புதிய வருடத்தைச் சுத்தமாக்க வரவேற்கச் சத்தமான பறை.நிச்சயம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள் டானியல் !

    ReplyDelete
  7. அருமை...அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //ஏழைகளின் கண்ணீர்
    துடைக்கப்பட்டால்தான்
    தேசத்தாயின் கண்ணீரும்
    துடைக்கப்படும்//

    புத்தாண்டுக்கு தங்கள் சமூக அக்கறை மிகுந்த கவிதை,நன்று

    ReplyDelete
  9. சாட்டையடியோடு புத்தாண்டு வரவேற்ப்பு

    ஏழைகளின் கண்ணீர்
    துடைக்கப்பட்டால்தான்
    தேசத்தாயின் கண்ணீரும்
    துடைக்கப்படும்

    அனைவரும் உணரட்டும்


    தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  10. ஏழைகளின் கண்ணீர்
    துடைக்கப்பட்டால்தான்
    தேசத்தாயின் கண்ணீரும்
    துடைக்கப்படும்
    >>
    யோசிக்க வேண்டிய விஷயம் சகோ

    ReplyDelete
  11. அருமை.
    எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே..

    ReplyDelete
  13. @ Mathumathi
    @ Mahendran
    @ Ramani
    @ Ganesh
    @ Hema
    @ Shanmugavel

    @ M.R. @ Ramesh
    @ Raji
    @ Rathnavel
    @ Munaivar
    Gunaseelan

    Thangal anaivarin Varugaikkum Pakirvukkum mikka Nanri. Anaivarukkum enathu manam kanintha Puththaandu Vaalthukkal.

    ReplyDelete
  14. @ Surya Jeeva

    Thangalai anbodu varaverkiren. Thangal muthal varugaikkum arumaiyana karuthuraikkum mikka nanri Sago.

    ReplyDelete
  15. @ Nandu @ Norandu

    Thangal varugaikkum pakirvukkum Nanri Sir.

    ReplyDelete
  16. @ Suryajeeva

    //தட்டி எழுப்புங்கள், விடியட்டும் இந்த புது வருடத்திலாவது //

    - அதற்காத்தான் தட்டி எழுப்புகிறேன் சகோ. தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஏழைகளின் கண்ணீர்
    துடைக்கப்பட்டால்தான்
    தேசத்தாயின் கண்ணீரும்
    துடைக்கப்படும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  19. @ Tamilraja

    Thangal muthal varugaikkum Pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  20. @ Raji

    Nanri Sago. Thangalukkum enathu iniya Puththaandu Vaalthukkal.

    ReplyDelete
  21. கல்லடி கொடுக்காத்தை இந்தச் சொல்லடி கொடுக்கவேண்டும். அப்பாவிகளின் வாழ்வு பறிக்கும் அப்பாவிகளின் ஆடம்பர வாழ்வைப் பறிக்க வேண்டும். அருமையான ஆழ்மன வெளிப்பாடு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. //////உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
    மறைந்து கிடக்கின்றன
    ஏழைகளின் ஆடைகள்

    ஏழைகளின் கண்ணீர்
    துடைக்கப்பட்டால்தான்
    தேசத்தாயின் கண்ணீரும்
    துடைக்கப்படும்//////////////

    ஆழமான வரிகள்...............வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.