Tuesday, October 11, 2011

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

திருட்டுப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நம் பதிவுலக நண்பர்கள் சில பேர் திருட்டுப்பதிவைப் பற்றி எவ்வளவோ எழுதித்தான் வருகிறார்கள். ஆனாலும் இந்த திருட்டுப்பதிவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகவே இந்த பதிவைப் பார்த்த பின்பாவது திருந்த வேண்டும். இல்லையேல் வருந்தவேண்டியிருக்கும்.

திருட்டுப்பதிவு போடும் கயவர்களே!

உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறீர்களா? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா? தாய்ப்பாலில் நீங்கள் விஷம் கலக்கிறீர்கள். ஆம். தாய்ப்பாலில் விஷம்தான் கலக்கிறீர்கள். இதைவிட அவமானகரமான விஷயம் வேறில்லை. ஒரு பதிவையிட எவ்வளவு கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?!. பதிவை இட சரக்கு இல்லையென்றால் ஏன் வலைப்பூ ஆரம்பிக்கிறீர்கள். அசிங்கமாக இல்லையா? ஒரு பதிவை இட எவ்வளவு நேரமெடுத்து, எவ்வளவு யோசித்து, மூளையை கசக்கி ஒரு தாய் பிள்ளையை பிரசவிக்கிறதுபோலத்தான் ஒவ்வொரு பதிவையும் இடவேண்டியிருக்கிறது. நீங்கள் எங்கள் பிள்ளைகளை எடுத்து உங்கள் பிள்ளைகளென்று பேரிட்டு பொய்ப்பெருமை பெற்றுக்கொள்கிறீர்கள். இனி இவ்விதம் செய்யாதீர்கள்! செய்தால் என்ன என்று கேட்கிறீர்களா?

உங்களை பதிவர்களென்று அழைத்துக்கொள்ளாமல் விபச்சாரிகள் என்று வேண்டுமானால அழைத்துக்கொள்ளுங்கள்..!!!.

குறிப்பு: பாதிக்கப்பட்ட வலைப்பதிவர்களின் சார்பாக இந்த சிறிய பதிவை இடுகிறேன். பின்பு சமயம் வாய்த்தால் பெரிய பதிவாக இடலாம் என நினைத்திருக்கிறேன். அதன் பிறகாவது இந்த கருங்காலிகள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. அருமையான பதிவு, பாராட்டுக்கள்.
    எனது பதிவைத் திருடி ஊடகம் நடாத்தும் இணையத்தினைப் பற்றிய கட்டுரையை இப்போது பதிவு செய்துள்ளேன்.
    http://kalamm.blogspot.com/2011/10/blog-post_11.html

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.