Saturday, October 8, 2011

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்களா?

என்றைக்காவது ஆரோக்கியமாக சிந்தித்திருக்கிறீர்கள? வாங்க. நம் சிந்தனைத் துணிகளை நற்சிந்தனை எனும் உஜாலாவில் நனைத்து மணக்க வைப்போம்.

இன்று… இந்த 21-ஆம் நூற்றாண்டில்… நம் சிந்தனைகள் மாசுபட்டுப் போய்விட்டன. செல்போன், இண்டெர்நெட், மெமரி கார்டுகள் உபயோகத்தில் நம் சிந்தனைகள் 99% காமவிகார சிந்தனைகளாகவே ஆகிவிட்டன. ஆடை அவிழ்த்துப் பார்க்கும் நம் பார்வைகள் மாற வேண்டும். உடுக்க உடையில்லாமல், உண்ண ஒருவேளை உணவில்லாமல் தவிக்கும் எத்தனையோ கோடி மக்களின் கண்ணீர்த்துளிகள் உலகெங்கும் சிந்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன ஒவ்வொரு மணித்துளிகளிலும். ஆனால் நாமோ செல்போன் மெமரிகார்டுகளில் ஆபாசக்குப்பையை அள்ளி வைத்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
எவன் அழிஞ்சா எனக்கென்ன? யார் எப்படிப் போனா எனக்கென்ன? என்று நம் கடமையைச் (???!!) சரியாகச் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

அட என்ன சார் இது! பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிங்களே!
எப்படிப்பட்ட அவசர யுகத்தில இருக்கோம். நாலு பேர மிதிச்சு ஏறிப் போய்க்கிட்டே இருந்தாத்தான் நாம நல்லா இருக்கமுடியும். போங்க… போங்க சார்.. வேலையைப் பார்த்துகிட்டு. அப்படின்னு சொல்றீங்களா?.....

கொஞ்சம் சிந்திங்க சார்!

பெரும்பான்மை கூட்டம் அப்படி வாழட்டுமே. நாம ஒரு சிறுபான்மை கூட்டமா இருந்தாலும் பரவாயில்ல. நம்மள மாதிரி ஆள்கள் இருக்குறதுனாலதான் கடவுள் இந்த பூமியை அழிக்காம ரன் பண்ணிக்கிட்டு இருக்குறாரு. உங்களுக்கு தெரியுமா?

அதுனால் தயவு செய்து…. இனியாவது தினமும் யாருக்காவது உதவி செய்ங்க.
தினமும் காலையில் கண்விழித்தவுடன் இன்று நம்முடைய மனத்தாலாவது, பணத்தாலாவது, என் உழைப்பினாலாவது, ஒரு நன்மையாவது ஒருவருக்காவது செய்வேன் என்று தீர்மானம் எடுங்க.

இதுனால் என்ன நன்மை அப்படிங்கறீங்களா?

உங்க மனசு ஆரோக்கியமா இருக்கும். இன்னிக்கு ஒரு ஜீவனுக்காவது பிரயோஜனமா வாழ்ந்திருக்கோம் அப்படிங்கற எண்ணத்தாலு ஒரு பொpய சந்தோஷம் உண்டாகும். உங்க மனசு சந்தோஷப்படுறதால உங்க உடலும் சந்தோஷப்படும். அதாவது நோய்களை நோய்கிருமிகளை அழிக்கக் கூடிய எதிர் உயிரிகளும்அதிகமா உற்பத்தியாகும். மனதும் உடலும் உங்களை வாழ்த்தும்.

பிறகென்ன? ஆரோக்கியமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்கதானே? வாழ்க வளமுடன்!

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.