Friday, October 14, 2011

உங்களுக்கு யார் எஜமானன் நீங்களா? உங்கள் வாயா?

இன்றைய சிந்தனைத் துளி:

வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு நம் வாய்தான் காரணமாகிறது. வாய் அடக்கம் இல்லாததால் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கோடி கோடி பேர்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உண்டு. அந்த பெற்றோர்களுக்கு 5 பெண் பிள்ளைகள். அதில் இந்த பெண்தான் கடைக்குட்டி. நான்கு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. கணவன், பிள்ளைகளென்று சந்தோஷமாய் வாழுகிறார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு இப்போது வயது 38 ஆகிவிட்டது. இன்னும் திருமணமாகவில்லை. அவளின் தாய், தகப்பனும், சகோதரனும் அழாத நாளில்லை. காரணம் இவளின் வாய்தான். பள்ளியில், கல்லூரியில், தெருவில் இவளின் கோபம், சண்டைகள் பிரசித்தம். “ நான் பேசினா கரெக்டா பேசுவேன். உள்ள ஒண்ணு வச்சி வெளிய ஒண்ணு பேச எனக்குத் தொpயாது” இதுதான் அவளது வழக்கமான டயலாக். இப்படி அவளாகவே அவளுக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு தான் பேசுவதுதான் சரி. மற்ற மனிதர்களெல்லாம் அயோக்கியர்கள். யாருக்கும் புத்தியில்லை என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்ததால் வந்த வினையைப் பாருங்கள். அவளைப் பார்த்தவுடனே எல்லோரும் ஒதுங்கி ஓடக் கூடிய நிலையை உண்டுபண்ணியிருந்த படியால் அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இன்னும் கன்னிகழியாத மங்கையாய் வாழ்ந்து வருகிறாள்.

இது ஒரு சாம்பிள்தான். எத்தனையோ வீடுகளில் இதைப்போன்ற பெண்களும், ஆண்களும் இருந்துகொண்டுதான் வருகிறார்கள். இவர்கள் சாதித்தது என்ன?
இவர்களின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவர்களின் வாய்தான்.

உங்களுக்கு நீங்கள் எஜமானாய் இல்லாமல் உங்கள் வாயை எஜமானாய் வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவுபெறும். உறவுகள் உடையும். வாழ்க்கை எனும் பூந்தோட்டம் வசந்தமில்லாமல் வாடிப்போகும்.

பேருந்திற்குள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யோசித்துப் பாருங்கள் பேருந்தை கட்டுப்படுத்துவது எது?

ஸ்டியரிங்தானே? அந்த சிறிய கருவி எவ்வளவு பெரிய பேருந்தை கட்டுப்படுத்துகிறது. அது தன் கடடுப்பாட்டை இழந்து பழுதானால் என்னவாகும் யோசித்திர்களா?

ஸ்டிரியங்கைப் போல்தான் நாக்கும். நமது முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் கருவியாய் இருக்கிறது

ஆகவே, முடிவாக

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே எஜமானாக இருங்கள். உங்கள் வாயை உங்கள் சொற்படி கேட்கும் வேலைக்காரனாக நடத்துங்கள்.

உங்கள் வாழ்க்கைப் பூமலரும்! வசந்தங்கள் தேடி வரும்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.