Friday, October 7, 2011

கோழிக்கனவும் என் கிரிக்கெட் கதையும்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் நம் அணி வாங்கிய செமத்தியான அடியை கண்ட உங்களைப்போலவே நானும் எரிச்சல் அடைந்து இனி கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து நிம்மதியாக படுக்கையில் சரிந்தேன்.

ஒரு கனவு கண்டேன். இனி என் கனவு.

ஒரு பெட்டைக்கோழி குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது. " சே! இனி இந்த சேவல் கிட்ட சேரக் கூடாது. எத்தனை தடவைதான் பிள்ளை பெத்துக்கிடறது. இனி நம்மள முடியாதுடா சாமி" என்று நினைத்தபடி விரதத்தை ஆரம்பித்தது. இரண்டு நாள் போயிருக்கும். அன்று குப்பைமேட்டில் வழக்கம்போல் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது வந்தது ஒரு ஆஜானுபாவான சேவல். கிட்ட வந்து கொஞ்சியபோது கோழிக்கு தேகம் உருகத் தொடங்கியது. பிறகென்ன? வழக்கம்போல ஆசைநாடகம் அரங்கேறியது அங்கே. 50 நாட்கள் கழித்து மறுபடியும் ஏழெட்டு குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே நினைத்தது 'இது இயற்கையின் நியதி. சுயக்கட்டுப்பட்டினால் பலனில்லை" என்று.

கனவு முடிந்து கண்விழித்தேன். மாலையில் டிவியை ஆன் செய்தால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட். பெங்களுரு Vs சவுத் ஆஸ்திரேலியா மேட்சை பார்க்க ஆரம்பித்தேன்.

கதைக்கும் கனவுக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து சிரித்தேன்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.