Saturday, November 8, 2014

மின்னாத மின்னல்





இடிக்காத இடிக்கு
பெய்யும் மழை
மின்னாத மின்னலுக்கு
பொழிகின்ற மேகம்

சொல்லாத சொல்லுக்கு
சுழல்கின்ற மனம்
விதிக்காத விதிக்கு
கதை கட்டும் மக்கள்

இப்படி
போலிகளால் நிரம்பிய
இந்த வாழ்க்கை நாடகத்தில்
மாறுவேடப் போட்டிக்கு மட்டும்
குவிகின்றன
கோடிக்கணக்கான விண்ணப்பங்கள்.


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. அருமையான வரிகள் நண்பரே..
    சிறந்த கவியாக்கம்...

    ReplyDelete
  2. கவிதை வித்தியாசமாக அழகாக இருக்கிறது.
    தலைப்பை இன்னும் பொருத்தமாக வைக்கலாமோ?
    எனினும் கவிதை அருமை வாழ்த்துகள். தொடருங்கள் தொடர்வேன்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.