Monday, November 10, 2014

தூக்க டைரி தெரியுமா உங்களுக்கு?




நம்மில் அநேகருக்கு தூக்க டைரின்னா என்னன்னு தெரியாது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்கு தூக்கத்தைப் பற்றி கொஞ்சம் உண்மைகளை தெரிந்துகொள்வது அவசியம். இன்றைய தலைமுறையில் நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்சினை உள்ளது. சரியாக தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவோர் ஏராளம் பெருகி வருகின்றனர். காரணங்களை அலசுவோம்.

தூக்கமின்மை பிரச்சினை சிறியவர் பெரியவர் என்றில்லாமல் இன்று அநேகரை அவஸ்தைக்குள்ளாக்குகிற ஒன்றாய் இருக்கிறது. தூக்கமின்மையில் பல வகை உண்டு. பொதுவாக கீழ்க்காணும் நான்கு வகைகள் காணப்படுகின்றன.

1.   பகலிலும் தூக்கக் கலக்கத்துடன் ஒரு வித சோம்பல் உணர்வுடனே இருப்பது.
2.   இரவில் சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லாமல் இருப்பது.
3.   இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது.
4.   இரவில் திடீரென கண்விழித்து விட்டால் அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்பது.

மேற்கண்ட நான்கு வகைகளைத் தவிர இன்னும் பல பிரச்சினைகளும் இருக்கலாம். நம்முடைய மூளையில் ஒரு பகுதி ரெப்டிலியன் மூளை (Reptilian Brain) எனப்படுகிறது.  இந்த ரெப்டிலியன் மூளைதான் நம் தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவில் சரியான நேரத்தில் குறைந்தது 6 மணி நேரமாவது நாம் ஒழுங்காக தூங்கினால்தான் இந்த ரெப்டிலியன் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இல்லையென்றால் பகலில் நம்மை மிகவும் சோர்வாக வைத்துவிடும். ஒரு வேளையும் செய்ய விடாமல் கெடுத்துவிடும். ஆகவேதான் குறைந்த பட்ச தூக்கம் நமக்கு அவசியமாகிறது.

தூக்கமின்மை பிரச்சினையை தீர்க்க பல வழிகள் இருந்தாலும் சில முக்கியமான தீர்வுகளை இப்போது பார்க்கலாம். நன்றாக தூங்கிப் பழக கீழ்க்காணும் விஷயங்களை பின்பற்றுங்கள்.
1.சரியான நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள். சரியான நேரத்துக்கு விழித்து விடுங்கள். இதை கட்டாய அனுபவத்திற்கு கொண்டு வாருங்கள்.
2. பகல் தூக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது. நோயாளிகள், வயதானவர்கள் என்றால் ஒரு அரை மணி நேர தூக்கம் போதும். பகலில் அதிக நேரம் படுக்கையில் கிடக்காதீர்கள்.
 3. இரவில் படுக்கச் செல்லும் முன் உங்கள் கவலைகளையெல்லாம்   
   மூட்டை கட்டி பரணில் போட்டு விடுங்கள். ஆம் கவலைதான்     
   தூக்கமின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கவலைப்பட்டு
   ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எல்லாம் நடக்கிற விதமாகவே  
   நடக்கும். ஆகவே கவலைகளை ஒழித்துவிடுங்கள் உறங்கச் செல்லும்
   முன்.
4.   உண்மையாகவே தூக்கம் வருகிற வரை படுக்கையில் சாயாதிருங்கள். ஆம். தூக்கம் வந்த பிறகே படுக்கைக்கு செல்லுங்கள்.

இப்போது நம்ம கட்டுரையின் தலைப்புக்கு வரலாம். ஆம். ஒரு தூக்க டைரி (Sleeping Diary) ஒன்றை பராமரியுங்கள். அது உங்கள் தூக்கத்தை குறித்து ஒரு பட்டியலை உங்களுக்குத் தரும். எதைச் சரி செய்ய வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லும். தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்ய இந்த தூக்க டைரி எழுதும பழக்கம் நல்லது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தினமும் உங்கள் தூக்க டைரியில் நீஙகள் படுக்கைக்குச் செல்லும் நேரம், எழுந்திருக்கும் நேரம், படுக்கையில் படுத்து தூங்காமல் இருக்கும் நேரம், உங்கள் மொத்த தூக்கம் எத்தனை மணி நேரம் என இந்த மாதிரி தலைப்புகளில் பட்டியலிட்டு தினமும் தொடர்ந்து எழுதி வாருங்கள். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த தூக்க டைரியை எடுத்து கவனித்து படித்துப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கும். தூக்கமின்மைப் பிரச்சினையை எப்படி சமாளிக்க வேண்டும்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை தூக்க டைரி உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

அதனால மக்களே! தூக்க டைரி எழுதிப் பழகுங்க. தூக்கமின்மைப் பிரச்சினைக்கு நீங்களே வழி கண்டுபிடிங்க.

வாழ்க நலமுடன்…!


.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.