Wednesday, November 12, 2014

உனக்கான என் நந்தவனம்





உனக்கான என் பாதைகள்
அப்படியேதான் இருக்கின்றன
ஆனால்
நடந்து செல்ல பாதங்களைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் நந்தவனம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
கொஞ்சிப் பேசும்
குரல் மொழிகளைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் இதயம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதில் ஜீவனாய் இருந்த
உன் பிம்பங்களைத்தான்
இன்னும் காணோம்

கனவுகளெல்லாம்
நிஜங்களாகக் கூடாதாவென
நினைத்த காலங்கள் போய்
நிஜங்களெல்லாமே கனவுகளாய்ப் போன
ஒரு இலையுதிர்க் காலத்தின்
இறுதி நாட்களுக்குள்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நானும் உன் நினைவுகளும்.




பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. வெகு நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றிங்க. தொடர்ந்து வாங்க.
    இலையுதிர்காலத் தேடல் அழகானது நினைவுகளைப் போல நிஜமும் ஒரு நாள் உங்களை தேடி வரும்.

    ReplyDelete
  2. நாளை வலைச்சரத்தில் [ http://blogintamil.blogspot.in]உங்கள் வலைத்தளத்தை அறிமுகபப்டுத்துகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    மனோ சாமிநாதன்
    www.muthusidharal.blogspot.com

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.